பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

வாகை


அறிவியல் பெயர் :

அல்பைசியா லெபக்

பொதுப்பண்பு :

  • நீண்ட சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.
  • இதன் மரம் அடர் சாம்பல் நிறமுடையது.
  • பூக்களானது வெண்மையானது.
  • நெற்றானது வெளிர் சாம்பல் நிறமுடையது.
  • ஒரு நெற்றில் 6 – 12 விதைகள் காணப்படும்.

பரவல் :

  • இம்மரம் இந்தியா முழுவதும் பரவி காணப்படுகிறது.
  • இவை குறைந்தளவு கடல்மட்ட உயரம் கொண்ட பகுதிகளிலும் நன்கு வளரும்.
  • தமிழ்நாட்டில் இம்மரம் வனப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

வாழிடம் :

வெப்பமண்டல பசுமை மாறா காடுகளிலும், வறண்ட இலையுதிர் காடுகளிலும் இவை அதிகமாக வளரும் மரமாகும்.

மண் :

நீர்தேங்காத தன்மை கொண்ட உவர்நிலங்கள், களிமண், செம்பொறை மண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1500 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

630 – 2600 மி.மீ

வெப்பநிலை :

25 – 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • பனியை தாங்கி வளரக்கூடிய தன்மையுடையது.
  • அதிகப்படியான நீரை தாங்கி வளரும் தன்மையற்றது.

வளரியல்பு :

இது ஒரு இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


இயற்கை மறு உருவாக்கம்:

  • சாதகமான சூழல் இருந்தால் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

செயற்கை மறு உருவாக்கம்: 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

இனப்பெருக்கம்:

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

  • நெற்றானது ஜனவரிமார்ச் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
  • விதைகள் சுத்தம் செய்யப்பட்டு பாலித்தீன் பைகளில் 12 மாதங்கள் வரை முளைப்புத்திறன் குறையாமல் சேகரித்து வைக்கலாம்.
  • ஒரு கிலோ விதையில் தேராயமாக 5000 - 12000 விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 65 - 90 சதவிகிதம் ஆகும்.

விதை நேர்த்தி

  • கொதிக்கவைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரமும், குளிர் நீரில் 48 மணி நேரமும் ஊர வைக்க வேண்டும்.
  • இவ்வாறு நேர்த்தி செய்வது விதை முளைப்பு விகிதத்தை அதிகரிக்கும்.

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

  • விதையானது நேரடியாக 10 x 1 மீ அளவுள்ள தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது.
  • பொதுவாக மார்ச் மாதம் தாய்பாத்தி விதைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
  • விதைக்கப்பட்ட 5 நாளிலிருந்து விதைகள் விதைக்கப்படுகிறது. 15 நாள் முடிவில் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது
  • கைகளினால் மண்ணில் விதைகள் விதைக்கப்படுவது சிறந்த முறையாகும்.
  • 6 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  • இடைவெளியானது 3 x 3 மீ  அல்லது 5 x 5 மீ  என இருக்க வேண்டும்.

 

  • மரப்பண்ணை களைகலற்றதாகவும், நீர் தேங்காதவாறும் இருக்க வேண்டும்.

 

  • 10 - 15 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 3700 - 4000 à®Žà®©à¯à®± விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

ஊடுபயிர் சாகுபடி :

தேயிலை, காபி இலை, ஏலக்காய் ஆகியனவும் ஊடுபயிராகப் பயிரிடலாம்.

முக்கிய பயன்கள் :

  • இம்மரம் மரச்சாமான்கள் செய்யவும், மேஜைகள் செய்யவும் மற்றும் கட்டுமான பணிகளுக்கும் பயன்படுகிறது
  • இம்மரம் வேளாண் உபகரணங்கள் தயாரிக்கவும், கைபிடிகள் தயாரிக்கவும் மற்றும் பெட்டிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
  • தீவனம்:

    • கால்நடைகளுக்கு à®šà®¿à®±à®¨à¯à®¤ à®¤à¯€à®µà®©à®®à®¾à®•à¯à®®à¯.
    • ஒட்டகத்திற்கு à®šà¯†à®°à®¿à®®à®¾à®©à®¤à¯à®¤à®¿à®±à¯à®•à¯ à®‰à®•à®¨à¯à®¤à®¤à®¾à®•à¯à®®à¯.

    மரக்கூழ்:

    மரக் à®•à¯‚ழானது à®šà®²à¯à®ªà¯‡à®Ÿà¯ à®®à¯à®±à¯ˆà®•à¯à®•à¯à®ªà¯ à®ªà®¿à®©à¯ à®¨à¯€à®£à¯à®Ÿ à®¨à®¾à®°à¯à®•à®³à¯à®Ÿà®©à¯ à®•à®²à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.

 

 

-->