பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

கதலி


அறிவியல் பெயர் :

லகர்ஸ்டிரோமியா ஸ்பீசியோசா

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய சிறிய இலையுதிர் மரம்.
  • மரப்பட்டை வெளிர் சாம்பல் நிறமுடையது.
  • மலர்கள் வசீகரிக்கக்கூடிய இளஞ்சிவப்பு நிறமுடையது.
  • இலைகள் அடர் பச்சை நிறமுடையது.
  • காய்கள் கடினமானது மற்றும் கேப்சியூள் வகையை சேர்ந்தது. விதைகள் சாம்பல் நிறமுடையது.

பரவல் :

  • இம்மரம் இந்தியாவின் பல பகுதிகளில் வளரக்கூடியது.
  • இம்மரம் ராஜஸ்தான் போன்ற வறண்ட பகுதிகளில் வளரும் தன்மையுடையது.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

ஆழமான நீர் தேங்காத தன்மை கொண்ட செம்மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது. ஆனால் மண் மரம் வளரும் அளவிற்கு ஈரப்பதம் கொண்டிருக்க வேண்டும்

மண் pH :

5.5 – 7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1200 - 2400 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1500 – 3500 மி.மீ

வெப்பநிலை :

25 - 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஓரளவு ஒளி விரும்பி மரமாகும்.
  • நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
  • மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • ஒட்டு நாற்று உற்பத்தி முறை மூலம் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாக வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த காய்கள் டிசம்பர் - பிப்ரவரி மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • காய்கள் வெயிலில் காய வைக்கப்படுகிறது. விதைகள் தனியே எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.
  • விதைகளை காற்று புகாத பாலித்தீன் பையில் இறுக கட்டி வைக்க வேண்டும். இவ்விதைகளை ஒரு வருடம் வரை முளைப்புத்திறன் குறையாமல் சேமித்து வைக்கலாம்.
  • ஒரு கிராம் விதையில் 76 - 195 விதைகளிருக்கும்.
  • விதைகளின் விதை முளைப்புத்திறன் 85 – 95 சதிவிகிதமாகும்.

  • குளிர் நீரில் 12 மணிநேரம் ஊர வைத்து நேர்த்தி செய்ய வேண்டும்.

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது பிப்ரவரிமார்ச் மாத இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
  • தாய்பாத்தி தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்கப்படுகிறது.
  • நாற்றங்காலை களைகளின்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 2 நாட்களில் விதைகள் முளைத்துவிடுகின்றன. 3 மாதத்தில் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
  • 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றானது வளர் ஊடகம் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைகளில் மாற்ற வேண்டும்.
  • நாற்றங்காலில் ஒரு வருடம் வரை நாற்றுகளை பராமரிக்க வேண்டும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • மழை பருவ காலத்தில் நடவுபணி மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.

  • நாற்றுகள் இளம் பருவமாக இருக்கும்பொழுது அவ்வப்போது களையெடுத்தல் அவசியமாகும்.
  • இம்மரம் ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • மரங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரிக்க ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மரங்களை வெட்ட வேண்டும்.

  • 18 - 20 வருடங்கள்

முக்கிய பயன்கள் :

  • இம்மரம் ஓரளவு கடினமானது மற்றும் எளிதாக அறுக்கக்கூடியது.
  • இம்மரம் கட்டுமான பணிகளுக்கு, உள் அலங்கார பணிகளுக்கு, கதவு, ஜன்னல்கள் தயாரிக்க, வேளாண் உபகரணங்கள் தயாரிக்க, படகு மற்றும் மரச்சமான்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • இம்மரம் ஒரு மிகச்சிறந்த எரிபொருளாகும். எனவே விறகு மற்றும் கரி தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.