பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

காப்பி மரம்


அறிவியல் பெயர் :

காஃபியா அராபிக்கா

பொதுப்பண்பு :

  • 12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய அகன்ற கிளைகளையுடைய மரமாகும்.
  • இலைகள் எதிரெதிரே அமைந்திருக்கும் மற்றும் பளபளப்பானது பச்சை நிறமுடையது.
  • பூக்கள் வெள்ளை நிறமுடையது.
  • காயானது டுரூப் வகையை சேர்ந்தது.

பரவல் :

  • இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட மரமாகும். எனினும் இந்தியா முழுவதும் வளர்க்கப்படுகிறது.

வாழிடம் :

ஒப்புமை ஈரப்பதம் அதிகம் நிறைந்த வெப்பமண்டல பகுதிகள்.

மண் :

ஆழமன, வளமான, சத்துக்கள் அதிகமான மற்றும் மட்கிய தாதுக்கள் அதிகம் நிறைந்த அமில மண்ணில் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1300 - 3000 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1500 – 2000 மி.மீ

வெப்பநிலை :

15 - 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.

வளரியல்பு :

பசுமை மாறா மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாக வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த கனிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பி செடிகளிலிருந்து சேகரிக்கப்படுகிறது.
  • கனிகளின் மேற்தோழானது நீக்கப்படுகிறது.
  • காப்பி கொட்டையானது இறுதியாக தரம் பிரிக்கப்படுகிறது.

  • விதைகளில் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபோக்டீரியா சேர்த்து வைக்கப்படுகிறது.
  • இதன் விதைகள் அக்ரசோன் மற்றும் ஆர்கனோ மெர்குரியல் கலவையை கொண்டு கலப்பதால் பூஞ்சைகள் பாதிப்பிலிருந்து பாதுகாத்து வைக்கப்படுகிறது.

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது டிசம்பர் - ஜனவரி மாத கால இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்ட விதைகளின் மீது மணல் கொண்டு மூடப்படுகிறது.
  • தாய்பாத்தி மீது நெல் வைக்கோல் கொண்டு நிழல் ஏற்படுத்தப்படுகிறது.
  • விதைக்கப்பட்டவுடன் பூவாளி கொண்டு நீர் பாய்ச்சப்படுகிறது.
  • வெயில் தாய்பாத்தி மீது படாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 45 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • இரண்டு இலைகள் துளிர் விட்ட பின் நாற்றானது வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • தேர்ந்தெடுக்கப்பட்ட நிழல் தரும் மரங்களை தவிர மற்ற மரங்களை நீக்க வேண்டும்.
  • நடவு செய்யப்படவுள்ள பகுதி சரிவான நிலப்பகுதியாக இருக்க வேண்டும்.
  • குழியின் அளவு 45 செ.மீ3 அல்லது 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • 1.25 - 2.5 மீ இடைவெளிகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிறகு முன்பே எடுக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு குழியினுள்ளும் 500 கிராம் பாஸ்பேட் சேர்த்து நாற்று நடப்பட வேண்டும்.
  • நடவானது சரிவான நிலப்பகுதி நோக்கி பயிரிட வேண்டும்.

நிழல் தரும் மரங்கள் நடவு :

  • கல்யான முருங்கை மரம் அதிகமாக பயிரிடப்படும் நிழல் தரும் மரமாகும்.
  • இரண்டு காப்பி செடிகளுக்கு ஒரு நிழல் மரம் பயிரிடப்படுகிறது.
  • மழை பருவ காலம் துவங்கியதும் சில்வர் ஓக் மரம் நிழல் மரமாக பயிரிடப்படுகிறது.
  • பக்க கிளைகளை மழை பருவ காலங்களில் நீக்க வேண்டும்.
  • சில்வர் ஓக் மரம் ஒரு நிறந்தரமான நிழல் தரும் மரமாகும்.

  • களையெடுத்தல் மற்றும் வேர்ப்பகுதியை சுற்ற இலை தழைகளை கொண்டு மூடுவது அவசியமாகும்.
  • குழிகள் 30 செ.மீ ஆழம் வரை தேன்டப்படுகிறது.
  • வெட்டப்பட்ட கிளைகள் மற்றும் களைகள் பண்ணையில் வெட்டப்பட்ட குழியினுள் இடப்படுகிறது.
  • சரிவான பகுதிகளில் 45 செ.மீ நிளத்திற்கு 30 செ.மீ ஆழத்திற்கு குழி தோன்டப்படுகிறது.
  • இக்குழியினுள் நோய் தாக்கிய மற்றும் இறந்த பாகத்தின் கிளைகளை இட்டு புதைக்க வேண்டும்.

  • நவம்பர் மாதம் முதல் அறுவடை செய்யப்படுகிறது.
  • சிறு விவசாயிகள் அக்டோபர் - பிப்ரவரி மாத காலத்தில் அறுவடை செய்கின்றனர்.
  • நல்ல கனிந்த காப்பியானது அறுவடை செய்யப்படுகிறது.
  • பெரு விவசாயிகள் ஒரே அறுவடையாக அனைத்து கனிந்த மற்றும் கனியாத காப்பி விதைகளை அறுவடை செய்கின்றனர்.

முக்கிய பயன்கள் :

  • காப்பி விதைகள் பொதுவாக ஐஸ்கிரீம் தயாரிக்க, மிட்டாய்கள் தயாரிக்க மற்றும் காப்பி தயாரிக்க பயன்படுகிறது.
  • இதன் மரம் கடினமானது, உறுதியானது மற்றும் எளிமையாக வேலைப்பாடு செய்யக்கூடியது. எனவே இம்மரம் மேஜைகள் செய்ய, நாற்காலி செய்ய பயன்படுகிறது.