பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

சிறிய இலையுடைய மகோகனி


அறிவியல் பெயர் :

ஸ்விடினியா மகோகனி

பொதுப்பண்பு :

  • 30மீ உயரம் வரை வளரக்கூடிய இலையுதிர் மரமாகும்.
  • இதன் தண்டு நேரானது, உருளையானது.
  • இலையின் அழகிய தோற்றம் காரணமாக இவை அலங்கார தாவரமாக பயன்படுகிறது.
  • இதன் பச்சை கலந்த மஞ்சள் நிறமுடைய பூக்கள் மணம் கமலக்கூடியது.
  • இதன் காயானது பல விதைகளை கொண்டது. இதன் விதைகள் சிறகு வடிவமானது.

பரவல் :

  • இந்திய மகாகனி இந்தியாவில் காணப்படுகிறது.
  • இவை ஆற்றுப்படுகைகளில் அதிகம் வளரும் தன்மை கொண்டது.

வாழிடம் :

Deciduous and Semi deciduous forest

மண் :

மணற்பாங்கான செம்மண் மற்றும் செம்பொறை மண்ணில் நன்கு வளரக்கூடியது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1150மீ உயரம் வரை வளரக்கூடியது.

மலையளவு :

1200 – 1500 மி.மீ

வெப்பநிலை :

16 - 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • நிழல் மற்றும் சாதகமற்ற காலநிலையில் இதன் வளர்ச்சி குறைகிறது.

வளரியல்பு :

அகன்ற இலையுடைய பசுமைமாறா மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

 

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • 5 x 7.5 செ.மீ இடைவெளியில் 2-4 செ.மீ ஆழத்தில் விதைகள் விதைக்கப்பட வேண்டும். விதைக்கப்பட்ட பின் தாய்பாத்திக்கு மூடாக்கு அமைக்க வேண்டும்.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 14 – 28 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • விதை முளைப்பு சதவிகிதம் 20 – 40 சதவிகிதம் ஆகும்.
  • நாற்றுகள் 6 மாதத்தில் 60 – 75 செ.மீ உயரம் வளர்கின்றது.

  • தேவையில்லை 

  • 5 x 7.5 செ.மீ இடைவெளியில் 2-4 செ.மீ ஆழத்தில் விதைகள் விதைக்கப்பட வேண்டும். விதைக்கப்பட்ட பின் தாய்பாத்திக்கு மூடாக்கு அமைக்க வேண்டும்.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 14 – 28 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • விதை முளைப்பு சதவிகிதம் 20 – 40 சதவிகிதம் ஆகும்.
  • நாற்றுகள் 6 மாதத்தில் 60 – 75 செ.மீ உயரம் வளர்கின்றது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • நிலத்தை உழுது மண்ணை இலகுவானதாக மாற்ற வேண்டும். பின் குழி எடுக்கும் இயந்திரத்தை கொண்டு குழிகள் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் எடுக்கப்படுகிறது.
  • குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • மேல் மண், 200 கிராம், வேப்பம்பிண்ணாக்கு மற்றும் 2:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு ஆகியவற்றை குழியினுள் இட்டு நாற்றுகள் நடப்படுகிறது.
  • நாற்றுகள் நடப்படுவதற்கு முன்பே இடுபொருட்களை குழியினுள் இட்டு உலர்த்த வேண்டும்.
  • இடைவெளியானது 6 x 6.5 மீ என இருக்க வேண்டும்.
  • நடப்பட்டவுடன் தண்ணீர் பாய்ச்சுவது மிக முக்கியமானதாகும்.
  • முதல் இரு வாரங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
  • தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு சொட்டுநீர் பாசனம் போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறையை பயன்படுத்தலாம்.

  • தேவையான அளவு உரங்களை அவ்வப்போது இட வேண்டும்.
  • முதல் வருடம் தழைசத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து (17:17:17) மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் செடிக்கு 200 கிராம் ஆகியவற்றை மாதம் ஒரு முறையிட வேண்டும்.
  • உரமிட்டபிறகு அதனை சிறிது மண்ணை கொண்டு மூட வேண்டும்.

  • 10 ஆண்டுகள்
  • ஒரு ஏக்கருக்கு 1200 – 1500 மரங்கள் என்ற எண்ணிக்கையில் நடப்பட வேண்டும்.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் ரூ.3100 அல்லது சதுர அடி ரூ.500 என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

ஊடுபயிர் சாகுபடி :

  • பீன்ஸ், உருளை, மரவள்ளி, சர்க்கரைவள்ளி போன்ற பயிர்களை ஊடுபயிராக பயிரிடலாம்.

முக்கிய பயன்கள் :

  • இம்மரத்தின் அழகிய தோற்றம் காரணமாக அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.
  • இவை மரச்சாமான்கள் செய்யவும் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவுமம் பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் மரம் நாற்காலி மற்றும் மேஜை போன்ற பொருட்கள் தயாரிக்கவும் இசைக்கருவிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

  • விதைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் சிறிது முக்கியமானது மரப்பட்டைகளில் இருந்து டானின் எடுக்கப்பட்டு சாயத்திற்கு பயன்படுகிறது.

-->