பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

அரச மரம்


அறிவியல் பெயர் :

பைகஸ் ரிலிஜியோசா

பொதுப்பண்பு :

  • அரச மரம் ஒரு இலையுதிர் மரமாகும். இம்மரம் ஈர நிலப்பகுதிகளில் பசுமை மாறா மரமாகவும் செயல்படுகிறது.
  • மரப்பட்டை சிவப்பு கலந்த பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிறமுடையது.
  • இலைகள் அடுத்தடுத்து அமைந்து காணப்படும். இலைகள் பளபளக்கக்கூடிய அடர் பச்சை நிறமுடையது.
  • இருபால் மலர்களை கொண்டது. மலர்கள் சிவப்பு நிறமுடையது.
  • காய்கள் கேப்சியூள் வகையை சேர்ந்தது மற்றும் ஆரஞ்சு நிறமுடையது. சில சமயங்களில் இளஞ்சிவப்பு நிறமாகவோ அல்லது அல்லது சிவப்பு நிறமாகவோ காணப்படும்.
  • இம்மரம் இந்து சமயத்தில் ஒரு முக்கிய மரமாக வழிபடப்படுகிறது.

பரவல் :

 

  • இம்மரம் இந்தியா முழுவதும் பரவிக்காணப்படுகிறது.

 

வாழிடம் :

இம்மரம் அனைத்து வகையான காடுகளிலும் வளரும் தன்மையுடையது. இம்மரம் மற்ற மரங்களின் மீது வளர்ந்து பெரிதாகும் தன்மையுடையது. கொதுவாக இம்மரம் சமவெளி மற்றும் மேட்டுப்பகுதிகளில் வளர்கிறது.

மண் :

நீர் தேங்காத தன்மை கொண்ட ஆழமான வண்டல் கலந்த செம்மண்ணில் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

5.5 - 6.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1520 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

500-5000மி.மீ

வெப்பநிலை :

16 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • ஒட்டு நாற்று உற்பத்தி மூலம் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த காய்கள் சேகரிக்கப்பட்டு நீரில் பிழியப்படுகிறது.
  • பிழியப்பட்ட நீரில் மிதக்கும் விதைகள் சேகரிக்கப்படுகிறது.
  • சேகரிக்கப்பட்ட விதைகள் காகிதம் மீது நிழலில் காய வைக்கப்படுகிறது.
  • காய வைக்கப்பட்ட விதைகள் சுத்தமான பாலித்தீன் பையில் சேமித்து வைக்கப்படுகிறது.

  • குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து நேர்த்தி செய்ய வேண்டும்.

  • தாய்பாத்தியானது செம்மண் மற்றும் மணல் கலந்த கலவை கொண்டு தயார் செய்யப்படுகிறது.
  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக தூவப்படுகிறது.
  • விதைக்கப்பட்ட 2 வாரத்தில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது.
  • 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • நாற்றுகள் வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்பட்டபின் நிழலில் ஒரு வாரத்திற்கு வைக்கப்பட வேண்டும்.
  • நாற்றுகளுக்கு அதிகப்படியான நீர் தெளிக்கக்கூடாது. அதிகப்படியான நீரை தாங்கி வளரும் தன்மையற்றது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும். ஜுலை மாதத்தில் நடவிற்காக குழியெடுப்பது சிறந்ததாகும்.
  • வறண்ட பகுதிகளுக்கு குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும். இடைவெளியானது 5 – 10 மீ என இருக்க வேண்டும்.
  • மழை பொழிவிற்கு பின் நடவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

  • அவ்வப்போது களையெடுத்தல் மற்றும் மண்ணை உழுதல் அவசியமாகும்.

 

முக்கிய பயன்கள் :

 

கால்நடை தீவனம் :

 

  • இம்மரத்தின் இலைகள் யானை, ஒட்டகம், ஆடு மற்றும் கால்நடைகளுக்கு ஒரு மிகச்சிறந்த தீவனமாகும்.
  • இலைகளில் 10 – 14 சதவிகித புரோட்டீன் உள்ளது. இவை எளிதாக மெல்லக்கூடியதாகவும், செரிமானமடையக்கூடியதாகவும் உள்ளதால் விலங்குகள் இதனை விரும்பி உண்ணுகின்றன.

 

மரம் :

 

  • இம்மரம் ஓரளவு வலிமையானதாகும்.
  • இம்மரம் பெட்டிகள் தயாரிக்க, மலிவான பலகைகள்  தயாரிக்க, கரண்டி தயாரிக்க மற்றும் மரகிண்ணம் தயாரிக்க பயன்படுகிறது.

 

ரப்பர்:

  • இதன் மரப்பாலில் இருந்து இரப்பர் தயாரிக்கப்படுகிறது.

 

டானின்:

  • மரப்பட்டைகள் டானின் தயாரிப்பில் பயன்படுகிறது.

 

மருத்துவம்:

  • இதன் கனிகள் இரத்தம், இருதய நோய்கள், செரிமானக் கோளாறுகள் மற்றும் மல இலக்கியாக பயன்படுகிறது.  மேலும் கனிகள் குளுமை தன்மையுடையவை.

 

 

-->