பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

வேப்ப மரம்


அறிவியல் பெயர் :

அசாடிராக்டா இண்டிகா

பொதுப்பண்பு :

  • வேப்ப மரம் இந்தியாவை தாயகமாக கொண்ட ஒரு சமூக, சமய முக்கியத்துவம் வாய்ந்த மரமாகும்.
  • இம்மரம் மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இம்மரம் அடர் பச்சை நிறமுடை பசுமையான மரமாகும்.
  • மரப்பட்டையானது சாம்பல் நிறத்திலும், உள்பகுதி பளபளப்பான வெண்மை நிறத்திலும் காணப்படும்.
  • கனியானது மஞ்சள் கலந்த பச்சை நிறமுடையது.
  • ஒரு கனிக்கு ஒரு வரையிருக்கும்.

பரவல் :

  • இந்தியாவின் வறண்ட காடுகளில் வளரும் மரமாகும்.

வாழிடம் :

வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் மற்றும் முட்புதர் காடுகளில் வளரும் மரமாகும்.

மண் :

அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. களிமண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1000 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

450 – 1100 மி.மீ

வெப்பநிலை :

42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளிப்பகுதி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • இளம் பருவத்தில் ஓரளவு நிழலை தாங்கி வளரும்.
  • அதிகப்படியான பனியை தாங்கி வளராது.
  • இம்மரத்தின் ஆழமான வேர்கள் வறட்சி காலங்களிலும் பசுமையாக வைக்கிறது.
  • இவை மறுதாம்பு மூலம் தழைத்து வளரும்.
  • வேர் கிழங்கு மூலமும் இனபொருக்கமடைகிறது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • இயற்கையாக விதைகள் மூலமாகவும், பறவைகளின் எச்சங்கள் மூலமாகவும் இனப்பெருக்கடைகின்றது.
  • இவை முட்புதர்களிலும், வரப்போரங்களிலும் எளிமையாக வளரும் தன்மை கொண்டது.
  • ஆனால் கால்நடை மேய்ச்சலிலிருந்து பாதுகாப்பது மிக அவசியம். மறுதாம்பு மற்றும் வேர்கிழங்கு மூலம் நன்கு வளரக்கூடியது.

 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

  • விதையானது ஜுன் - ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் தேராயமாக 3300 - 5000 விதைகள் இருக்கும்.
  • இவ்விதை எண்ணெய் விதை என்பதால் நீண்ட நாட்களுக்கு சேகரித்து வைக்க முடியாது.

 

  • தேவையில்லை

 

  • 20 x 10 செ.மீ அல்லது 20 x 15 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் வளர் ஊடகங்களை நிறப்பிஅதில் பை;ககு 2 விதைகள் என விதைக்கப்பட வேண்டும்.
  • அதிகப்படியான களிமண் நாற்று வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.
  • ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • முளைத்து வளர்ந்த நாற்றை பைக்கு ஒன்று என மறுநடவு செய்ய வேண்டும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • ஒரு வருட வயதுடைய நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • நடவானது ஜுலைஆகஸ்ட் காலங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

நேரடி விதைப்பு முறை :

  • இம்முறையில் விதையானது நேரடியாக நிலத்தில் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் விதைக்கப்படுகிறது.         

நாற்று நடவு :

  • குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • நடப்படுவதற்கு முன் குழியில் 5 கிலோ எரு மற்றும் 25 – 50 கிராம் டி..பி போன்றவற்றை இட வேண்டும்.
  • இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.

பாராமரிப்பு :

  • அவ்வப்போது களைகள் எடுத்தல் மற்றும் நீர் பாய்ச்சுதல் அவசியமாகும்.

தண்ணீர் பாய்ச்சுதல் :

  • வறட்சி காலங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • உவர்நிலங்களில் கோடை காலங்களில் நீர் பாய்ச்சுவது மிக அவசியமாகும்.
  • நாற்றின் அடிப்பகுதியை மூடாக்கு செய்வதின் மூலம் மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள முடியும்.

மரப்பராமரிப்பு :

  • களையெடுத்தல் நாற்றின் வளர்ச்சிக்கு மிக அவசியமாகும். டிராக்டர் கொண்டு உழுதல் அதிகப்படியான களைகள் வளர்வதை தடுக்கலாம். உழுதல் வேர் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது.
  • இயற்கையாக முளைத்த மரங்களில் மரங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரிக்க ஒரு சில வேப்ப மரங்களை நீக்க வேண்டும்.
  • 2 – 3 வயதானவுடன் மரங்களுக்கிடையேயாய இடைவெளிகள் 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
  • நாற்று நடவு மூலம் உருவாக்கப்பட்ட பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.

 

  • மரத்தேவைக்காக 35 - 40 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
  • எரிபொருளுக்காக 8 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 4200 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

 

ஊடுபயிர் சாகுபடி :

  • பயறுவகைகள், வேர்க்கடலை, காய்கறிகளை ஊடுபயரிடலாம்.

முக்கிய பயன்கள் :

  • இதன் மரம் கட்டுமான பணிகளுக்கும், மரச்சாமான்கள் செய்யவும், கைபிடிகள் தயாரிக்க, மாட்டுவண்டி பாகங்கள் தயாரிக்க மற்றும் படகு தயாரிக்கவும் பயன்படுகிறது.
  • இதன் இலை 12 – 30 சதவிகிதம் புரோட்டீன் கெர்டுள்ளதால் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
  • இதன் விதைகள் 20 – 30 சதவிகிதம் எண்ணெய் தரவல்லது.
  • வேப்ப எண்ணெயில் அசாடிராக்டின் என்ற வேதிப்பொருள் உள்ளதால் பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது.
  • இதக் பட்டை 12 – 14 சதவிகித டானின் கொண்டது.
  • வேப்பம் பிண்ணாக்கு ஒரு சிறந்த எருவாகும்.

தீவனம்:

  • இலைகள் à®•à®¾à®²à¯à®¨à®Ÿà¯ˆà®¤à¯ à®¤à¯€à®µà®©à®®à®¾à®• à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.

 

-->