பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

பரசு மரம்


அறிவியல் பெயர் :

பியூடியா மோனோஸ்பெர்மா

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும்.
  • மரப்பட்டை வெளிர் சாம்பல் நிறமுடையது.
  • இலைகள் அடர் பச்சை நிறமுடையது.
  • பூக்கள் அடர் சிவப்பு நிறமுடையது.
  • ஒவ்வொரு நெற்றும் ஒரு விதையை கொண்டிருக்கும். விதைகள் காகிதம் போன்ற சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடைய மேற்தோலை கொண்டது.

பரவல் :

 

  • இம்மரம் இந்திய பகுதிகளில் பரவிக் காணப்படுகிறது.

 

வாழிடம் :

வறண்ட இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கின்றது.

மண் :

கடலோர மண், கரிசல் மண் மற்றும் வாய்கால் ஓரங்களிலுள்ள மண்ணில் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

7-8

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1330 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

500 – 3800 மி.மீ

வெப்பநிலை :

47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.
  • மறுதாம்பு மூலம் தழைத்து வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மற்றும் மறுதாம்பு மூலமாக

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த காயானது மார்ச் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • காயிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • பிரித்தெடுக்கப்பட்ட விதைகள் வெயிலில் உலர்த்தப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 9800 – 14800 விதைகளிருக்கும்.
  • விதைகளை ஒரு வருடம் வரை சேகரித்து வைக்கலாம்.

  • தேவையில்லை

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. விதைகள் விதைப்பு மே மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 10 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • தாய்பாத்தியை களைகளின்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • தாய்பாத்திக்கு தினமம் பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
  • நாற்றுகள் இரண்டு இலைகள் துளிர்ந்த பிறகு வளர் ஊடகம் நிரப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • 6 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • 6 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  • அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 2 - 3 மீ என இருக்க வேண்டும்.

  • மரங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரிக்க அவ்வப்போது மரங்களை நீக்க வேண்டும்.
  • அரக்கு தயாரிப்பிற்கு அவ்வப்போது பக்க கிளைகளை நீக்கவும் மர உச்சி பகுதியை நீக்கவும் வேண்டும்.

  • 15 - 30 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

முக்கிய பயன்கள் :

  • இம்மரம் அரக்கு உற்பத்திக்கு அதிகமாக பயன்படுகிறது. அரக்கு உற்கத்திக்கு 4 செ.மீ ஆழம் வரை மேற்தோல் நீக்கப்பட வேண்டும்.
  • கடலோர பகுதி, களிமண் மற்றும் நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் மரப்பொருக்கத்தை அதிகரிக்க இம்மரம் வளர்க்கப்படுகிறது.
  • இம்மரம் விறகிற்காகவும், துப்பாக்கி மருந்து தயாரிக்க மற்றும் கரிகட்டை தயாரிக்க பயன்படுகிறது.
  • இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
  • இதன் பட்டையிலிருந்து சிவப்பு நிற கோந்து எடுக்கப்படுகிறது. இக்கோந்து பியூட்டியா கோந்து என அழைக்கப்படுகிறது.

தீவனம்:

  • எருமைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
  • மலர்களில் பெறப்படும் ஆரஞ்சு நிறசாயம் பருத்தி ஆடைகளுக்கு நிறமிட பயன்படுகிறது. இலைத்தட்டு மற்றும் பீடி சுற்றுவதற்கு இலைகள் பயன்படுகிறது.
  • பட்டையை கீறுவதன் மூலம் சிவப்பு நிற கோந்து அல்லது பெங்கால் பிசின் பெறப்படுகிறது.

-->