பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

பூ மருது


அறிவியல் பெயர் :

டெர்மினேலியா பேனிகுளேட்டா

பொதுப்பண்பு :

  • பூ மருது ஒரு பசுமை மாறா மரமாகும்.
  • இலைகள் இதய வடிவானது மற்றும் எதிரெதிரே அமைந்திருக்கும்.
  • பூக்கள் வெளிர் வெள்ளை நிறமுடையது.
  • காய் பெரியது மற்றும் சிறிய இரு இறகு போன்ற வடிவமுடையது.

பரவல் :

  • இம்மரம் இந்தியா முழுவதும் பரவிக்காணப்படுகிறது.

வாழிடம் :

பசுமை மாறா காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

நீர் தேங்காத ஓரளவு வளம் மிக்க மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.

மண் pH :

4.5-7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

900 - 1200 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1000 - 5000 மி.மீ

வெப்பநிலை :

13 - 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

ஈரமான நீர் தேங்காத நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இம்மரம் ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் வளரும் தன்மையற்றது.
  • வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.

வளரியல்பு :

பசுமை மாறா மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • விதைகள் மற்றும் மறுதாம்பு மூலம் இனப்பெருக்கமடைகிறது.
  • இம்மரம் நீர் நிலை பகுதிகளில் பரவலாக வளரும்.

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • இம்மரம் வருட வருடம் அளவுக்கததிகமாக காய்க்கவல்லது.
  • பழுத்த காயானது மேஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • ஒரு கிராம் விதையில் 14 – 15 விதைகளிருக்கும்.
  • இதன் விதைகள் சாதாரணமாக 2 வருடம் வரை முளைப்புத்திறனை தக்கவைத்துக்கொள்ளும் தன்மையுடையது.

  • கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 1 நிமிடம் ஊர வைக்கப்பட்டு பின் குளிர் நீரில் 48 மணி நேரம் ஊரவைக்கப்படுகிறது.

  • விதைகள் நிழல் உள்ள தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் விதைப்பது சிறந்ததாகும்.
  • விதைக்கப்பட்டபின் பூவாளி கொண்டு தினமும் நீர் பாய்ச்சப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 7 நாட்களில் விதைகள் முளைக்கத் துவங்குகிறது. ஒரு மாதத்திற்குள் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
  • 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • பருவ மழை சமயத்தில் 3 x 3 மீ இடைவெளியில் நாற்றுகள் நடப்படுகிறது.

  • மரப்பண்ணை களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வப்போது மண்ணை உழுதல் மிகவும் அவசியம்.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

நீர்ப்பாசனம் :

  • பருவ மழை பெய்யும் வரை நீர்ப்பாசனம் அவசியம்.
  • நீர் வேர் பகுதியில் தேங்காமல் நீர்ப்பாசனம் செய்வது அவசியம்.

  • 16 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் தோராயமாக 3200 – 3500 ரூபாய் என்ற விலையில் விற்க்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

முக்கிய பயன்கள் :

  • இதன் மரம் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவும், விறகிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் மரப்பட்டை மருந்து தயாரிக்க பயன்படுகிறது.