பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

மயில் கொண்றை மரம்.


அறிவியல் பெயர் :

டெலானிக்ஸ் ரீஜியா

பொதுப்பண்பு :

  • அகன்ற கிளைகளை கொண்ட வேகமாக வளரக்கூடிய இலையுதிர் மரமாகும்.
  • கிளைகள் அகன்று குடை போன்று காணப்படும்.
  • மலர்கள் தீ போன்ற சிவப்பு நிறமுடையது.
  • நெற்நுகள் அடர் சாம்பல் நிறமுடையது மற்றும் கடினமானது. ஒவ்வொரு நெற்றிலும் 5 – 10 விதைகளிருக்கும்.

பரவல் :

  • இம்மரம் இந்தியாவிற்கு 150 வருடம் முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட மரமாகும்.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

அனைத்து மண்ணில் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

5-6

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

2000 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

700 – 1200 மி.மீ

வெப்பநிலை :

24 - 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த நெற்றானது ஏப்ரல் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது. உலர்த்தப்பட்ட நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • விதைகளை பாலித்தீன் பையில் நீண்ட நாட்கள் வரை சேகரித்து வைத்துக்கொள்ளமுடியும்.
  • ஒரு கிலோ விதையில் 2100 - 3250 விதைகளிருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 25 – 70 சதிவிகிதமாகும்.
  • நாற்று உற்பத்தி திறன் 20 – 30 சதவிகிதமாகும்.
  • விதைகள் 5 வருடங்கள் வரை முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையுடையது.

  • குளிர் நீரில் 10 நாட்கள் ஊர வைத்து நேர்த்தி செய்வதன் மூலம் 25 சதவிகித முளைப்புத்திறனை தரக்கூடியது.
  • குளிர் நீரில் 5 நாட்கள் ஊர வைத்து நேர்த்தி செய்வதன் மூலம் 30 சதவிகித முளைப்புத்திறனை தரக்கூடியது.

  • விதைகள் நிழலற்ற தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • தாய்பாத்தி விதைப்பானது செப்டம்பர் - அக்டோபர் கால இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
  • தாய்பாத்திக்கு அவ்வப்போது பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 12 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் வளர் இடுபொருட்கள் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • விதைகளை நேரடியாக வளர் இடுபொருட்கள் நிறப்பப்பட்ட பாலித்தீன் பையில் விதைக்கப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • ஜுலை மாதத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • வறண்ட பகுதிகளுக்கு குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  • இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
  • மழை பருவகாலம் தொடங்கிய பின் நடவு பணிகளை தொடங்க வேண்டும்.

  • மரத்தின் வளர்ச்சிக்காக அவ்வப்போது பக்க கிளைகளை நீக்க வேண்டும்.

முக்கிய பயன்கள் :

  • அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.
  • நிழலுக்காக இம்மரம் அதிக வெப்பநிலை கொண்ட பகுதிகளிலும், பூங்காக்களிலும் வளர்க்கப்படுகிறது.

மருத்துவ பயன்:

  • மரப்பட்டைகள் மருத்துவப் பயன்களைக் கொண்டது.

எரிபொருள்:

  • பெரிய நெற்றுகள் மற்றும் மரக்கட்டைகள் எரிபொருளாகவும் பயன்படுகிறது.

-->