பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

மாவிலங்காய் மரம்


அறிவியல் பெயர் :

கிரிட்டிவா ரிலிஜியோசா

பொதுப்பண்பு :

  • மெதுவாக வளரகடகூடிய இளையுதிர் மரமாகும்.
  • அதிக எண்ணிக்கையிலான கிளைகளை கொண்டது.
  • இலைகள் பளபளப்பான பச்சை நிறமுடையது.
  • இம்மரம் வெண்ணிற புள்ளிகளுடன் கூடிய பட்டையை கொண்டது.
  • இம்மரம் பொதுவாக கோவிலின் அருகாமையில் வளர்க்கப்படுகிறது. இம்மரம் சமய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பரவல் :

  • இம்மரம் இந்தியா முழுவதும் பரவிக்காணப்படுகிறது.

வாழிடம் :

திறந்த இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

வளமான மண்ணிலும், அமிலத்தன்மை கொண்ட மண்ணிலும் நன்கு வளரும் தன்மை கெண்டது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1200 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

750 – 2250 மி.மீ

வெப்பநிலை :

24 - 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு நிழல் விரும்பி மரமாகும்.
  • வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக பெருக்கமடையக்கூடியது. வேர் கிழங்குகள் மூலமும் பெருக்கமடையக்கூடியது.

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் ஒட்டு நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த காய்கள் சேகரிக்கப்பட்டு நீரில் பிழியப்படுகிறது.
  • பிழியப்பட்ட நீரில் மிதக்கும் விதைகள் சேகரிக்கப்படுகிறது.
  • சேகரிக்கப்பட்ட விதைகள் காகிதம் மீது நிழலில் காய வைக்கப்படுகிறது.
  • காய வைக்கப்பட்ட விதைகள் சுத்தமான பாலித்தீன் பையில் சேமித்து வைக்கப்படுகிறது.

  • குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து நேர்த்தி செய்ய வேண்டும்.

  • தாய்பாத்தியானது செம்மண் மற்றும் மணல் கலந்த கலவை கொண்டு தயார் செய்யப்படுகிறது.
  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக தூவப்படுகிறது.
  • விதைக்கப்பட்ட 2 வாரத்தில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது.
  • 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • நாற்றுகள் வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்பட்டபின் நிழலில் ஒரு வாரத்திற்கு வைக்கப்பட வேண்டும்.
  • நாற்றுகளுக்கு அதிகப்படியான நீர் தெளிக்கக்கூடாது. அதிகப்படியான நீரை தாங்கி வளரும் தன்மையற்றது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும். ஜுலை மாதத்தில் நடவிற்காக குழியெடுப்பது சிறந்ததாகும்.
  • வறண்ட பகுதிகளுக்கு குழியின் அளவு 60 செ.மீ3 எனவும் இடைவெளியானது 5 – 10 மீ எனவும் இருக்க வேண்டும்.
  • மழை பொழிவிற்கு பின் நடவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

  • அவ்வப்போது களையெடுத்தல் மற்றும் மண்ணை உழுதல் அவசியமாகும்.

முக்கிய பயன்கள் :

  • இதன் பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு உணவு செரிமானமின்மையை குணப்படுத்த பயன்படுகிறது.
  • இதன் பட்டைகள் மற்றும் இலைகள் ருமாட்டிக் மூட்டுவலிக்கு மருந்தாக பயன்படுகிறது.
  • இதன் இலைகள் சூடுபடுத்தப்பட்டு காதுவலிக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் பூக்கள் பித்தநீர் சுரப்பை தூண்ட பயன்படுகிறது. மேலும் பூக்கள் வயிற்று வலியை குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
  • காய வைக்கப்பட்ட காயும் மருந்தாக பயன்படுகிறது.