பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

தான்றிக்காய்


அறிவியல் பெயர் :

டெர்மினேலியா பெல்லரிக்கா

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய அகன்ற கிளைகளை கொண்ட வேகமாக வளரக்கூடிய பெரிய இலையுதிர் மரமாகும்.
  • மரப்பட்டை நீளம் கலந்த சாம்பல் நிறமுடையது.
  • இலைகள் அடர் பச்சை நிறமுடையது.
  • பூக்கள் சிறியது மற்றும் பச்சை கலந்த மஞ்சள் நிறமுடையது.
  • காய்கள் டுரூப் வகையை சேர்ந்தது. காய்கள் காய்கள் காய்ந்தபின் சாம்பல் நிறமுடையது, கடினமானது மற்றும் இதன் மேற்புறதோல்மரம் போன்று கடினமானது.

பரவல் :

  • இம்மரம் இந்தியா முழுவதும் பரவக்காணப்படுகிறது.

 

வாழிடம் :

வெப்பமண்டல மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

செம்மண் மற்றும் வண்டல் மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.

மண் pH :

6 – 6.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

500 - 1500 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

900 - 3800 மி.மீ

வெப்பநிலை :

17 - 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

நீர் ஓடைப்பகுதிகள் மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • அதிக ஒளி விரும்பி மரமாகும்.
  • பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • விதைகள் மற்றும் மறுதாம்பு மூலம் இனப்பெருக்கமடைகிறது.

 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த காயானது நவம்பர் - பிப்ரவரி மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • காய்கள் நிலத்தில் விழுந்தபிறகு சேகரிக்கப்படுகிறது.
  • சேகரிக்கப்பட்ட காய்கள் மேற்தோல் நீக்கப்பட்டு பின் சூரிய வெயிலில் உலர்த்தப்படுகிறது.
  • நிழலில் காய வைக்கப்பட்டு பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது. 12 மாதம் வரை முளைப்புத்திறன் குறையாமல் இவ்விதைகளை சேகரித்து வைக்கலாம்.
  • மேற்தோல் நீக்கப்பட்ட ஒரு கிலோ விதையில் 400 - 500 விதைகளிருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 55 – 70 சதவிகிதமாகும்.
  • நாற்று உற்பத்தி திறன் 35 – 60 சதவிகிதமாகும்.

  • மேற்தோல் நீக்கப்பட்ட விதைகள் குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.

  • விதைகள் நிழல் உள்ள தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் விதைப்பது சிறந்ததாகும்.
  • விதைக்கப்பட்டபின் பூவாளி கொண்டு தினமும் நீர் பாய்ச்சப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 7 நாட்களில் விதைகள் முளைக்கத் துவங்குகிறது. ஒரு மாதத்திற்குள் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
  • 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்று தாய்பாத்தியிலிருந்து வளர் ஊடகம் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
  • சாலையோர நடவிற்கு 16 மாத நாற்று பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • 3 – 4 மாத நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • பருவ மழை சமயத்தில் 3 x 3 மீ இடைவெளியில் நாற்றுகள் நடப்படுகிறது.
  • சாலையோர நடவிற்கு குழியின் அளவு 60 செ.மீ3 மற்றும் இடைவெளியானது  6 - 8 மீ என இருக்க வேண்டும்.

  • நடப்பட்டதிலிருந்து 2 – 3 வருடங்களுக்கு மரப்பண்ணை களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வப்போது மண்ணை உழுதல் மிகவும் அவசியம்.

 

  • 10 - 15 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் தோராயமாக 3000 – 3500 ரூபாய் என்ற விலையில் விற்க்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

ஊடுபயிர் சாகுபடி :

  • அனைத்து வேளாண் பயிர்களையும் முதல் மூன்று வருடத்திற்கு ஊடுபயிராக பயிரிடலாம்.

முக்கிய பயன்கள் :

  • இதன் காய் மருந்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இக்காய் தன்றிக்காய் என்ற பெயரில் அதிகம் விற்க்கப்படுகிறது.
  • காயிலிருந்து டானின் எடுக்கப்படுகிறது. இதன் காய் 21.4 சதவிகித டானின் கொண்டுள்ளது. இது துணிகளுக்கு சாயமேற்ற பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் மரம் கட்டுமான பணிகளுக்கும், பெட்டிகள் தயாரிக்கவும் மற்றும் படகு கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • மரம் சமய முக்கியத்துவம் வாய்ந்தது.