பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

சந்தன வேம்பு மரம்


அறிவியல் பெயர் :

டூனா சிலியேட்டா

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய அகன்ற கிளைகளுடன் வேகமாக வளரக்கூடிய மரமாகும்.
  • மரப்பட்டை சாம்பல் நிறமுடையது.
  • பூக்கள் தேன் நிறைந்தது மற்றும் சிறியது. பூக்கள் பொதுவாக மஞ்சள் நிறமுடையது.
  • காய்கள் கேப்சியூல் வகையை சேர்ந்தது. விதைகள் இறகு போன்றது.

பரவல் :

  • இம்மரம் இந்தியா முழுவதும் பரவக்காணப்படுகிறது.

வாழிடம் :

பசுமை மாறா காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

ஆழமான மற்றும் வளமான மண்ணிலும் மற்றும் வண்டல் மண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது.

மண் pH :

5.5 மற்றும் 7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1500 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1100 - 4000 மி.மீ

வெப்பநிலை :

37 - 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் ஆழமான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • ஒளி விரும்பி மரமாகும்.
  • வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.

வளரியல்பு :

பசுமை மாறா மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மற்றும் மறுதாம்பு மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த நெற்றானது மேஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • காயானது மஞ்சள் நிறமாக மாற்றமடைந்தவுடன் விதைக்காக சேகரிக்கப்படுகிறது.
  • ஒரு கிலோ காயில் 200 கிராம் விதைகள் கிடைக்கும்.
  • ஒரு கிராம் விதையில் 350 விதைகளிருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 50 – 80 சதவிகிதமாகும்.

  • தேவையில்லை.

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • தாய்பாத்தி விதைப்பானது பொதுவாக மேஜுன் மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 7 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்று தாய்பாத்தியிலிருந்து வளர் ஊடகம் நிறப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவம் துவங்கியபின் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • 6 – 8 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 மற்றும் 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • பருவ மழை சமயத்தில் 3 x 3 மீ மற்றும் 4 x 4 மீ இடைவெளியில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.

  • 4 வருடமான மரங்களின் பக்க கிளைகளை நீக்க வேண்டும்.
  • களையெடுத்தல் மற்றும் மண் உழுதல் மிக அவசியமாகும்.

  • 10 – 15 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 3500 – 3700 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

  • இம்மரம் அலங்கார மரமாக சாலையோரங்களில் வளர்க்கப்படுகிறது.
  • இதன் மரம் பொருளாதார முக்கியத்துவம்; வாய்ந்த மரச்சாமான்கள் தயாரிக்க, கதவு மற்றும் ஜன்னல் தயாரிக்க, கட்டுமான பொருட்கள் தயாரிக்க மற்றும் இசைக்கருவிகள் தயாரிக்க பயன்படுகிறது.

  • பூக்கள் சிவப்பு நிற பொருட்கள் மற்றும் சல்பர் நிற சாயமுடையது.
  • பூக்களை கொதிக்க வைத்து பெறப்படும் மஞ்சள் நிறமுடைய சாற்றில் பருத்தி மற்றும் கம்பளி துணிகளை சாயமேற்ற பயன்படுகிறது.
  • செந்தூரம் மற்றும் மஞ்சளுடன் சேர்ப்பதன் மூலம் சல்பர் - மஞ்சள் நிற பொருள் உருவாகிறது. இதன் பட்டை டானின் நிறைந்தது.
  • இதன் பட்டையிலிருந்து பெறப்படும் நார் பாரம்பரிய கயிறு மற்றும் பைகள் தயாரிக்கப்படுகிறது.
  • இதன் கனியிலிருந்து நறுமணம் உடைய எண்ணெய் கிடைக்கிறது.

-->