பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

நீர் கடம்ப மரம்


அறிவியல் பெயர் :

மித்ரகைனா பார்விபுளோரா

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும்.
  • மரப்பட்டையானது வெளிர் சாம்பல் நிறமுடையது.
  • இலைகள் அடர் பச்சை நிறமுடையது. இலைகளின் அளவு ஒன்றுக்கொன்று மாறுபடும்.
  • பூக்கள் மணமுடையது மற்றும் பச்சை கலந்த மஞ்சள் நிறமுடையது.
  • இதன் விதை பந்தானது வட்ட வடிவமுடையது மற்றும் எண்ணற்ற விதைகளை கொண்டது. விதைகள் வெளிர் சாம்பல் நிறமுடையது.

பரவல் :

  • இம்மரம் இந்தியா முழுதும் பரவி காணப்படுகிறது.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

பரவலாக ஆழமான மற்றும் நீர் தேங்காத மண்ணில் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

5.5 - 7

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1800 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

875 – 3250 மி.மீ

வெப்பநிலை :

20 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இம்மரம் ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • நீர்தேங்கியிருக்கும் நிலப்பகுதியிலும் வளரும் தன்மை கொண்டது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

  • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த காயானது ஏப்ரல் - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • காயானது வெயிலில் உலர்த்தப்பட்டு விதைகள் பிரித்தெடுக்கப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 10000 விதைகளிருக்கும். விதைகள் சிறிய அளவுடையது.
  • விதை முளைப்புத்திறன் 50 – 60 சதிவிகிதமாகும்.

 

  • தேவையில்லை

 

 

  • தாய்பாத்தியில் விதைகள் நேரடியாக தூவுதல் முறையில் விதைக்கப்படுகிறது.
  • விதைகளை மணல் மற்றும் சாம்பல் கலந்து விதைப்பது சிறந்ததாகும்.
  • விதைக்கப்பட்ட விதைகள் மணல் கொண்டு மூடப்பட வேண்டும்.
  • பூவாளி கொண்டு தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
  • விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு மாதத்தில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • இரண்டு இலைகள் கொண்ட நாற்றுகள் பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
  • ஒரு வருடமான நாற்றுகள் நடவிறகு பயன்படுத்தபடுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • நாற்றானது ஜுலைஆகஸ்ட் மாத கால இடைவெளியில் நடப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.

  • களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று வளர்ச்சிக்கு உதவுகிறது.

  • 20 – 35 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 1300 – 2500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

  • இம்மரம் கட்டிட கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் மரச்சாமான்கள், வேளாண் உபகரணங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
  • இதன் இலை அதிகளவு டானின் கொண்டது.
  • இதன்மரப்பட்டையானது நார் தயாரிக்க பயன்படுகிறது.