பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

கருவாகை


அறிவியல் பெயர் :

அல்பைசியா ஓடோரட்டிசீமா

பொதுப்பண்பு :

  • அடர் பச்சை கிளைகளையுடைய சராசரி அளவுடைய பெரிய மரமாகும்.
  • இதன் மரம் வெளிர் மஞ்சள் கலந்த சாம்பல் நிறமுடையது.
  • நெற்றானது சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.
  • ஒரு நெற்றில் 8 – 12 விதைகளிருக்கும்.

பரவல் :

  • இம்மரம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை பொதுவாக மலைச்சரிவுகளில் அதிகம் வளர்கிறது.

வாழிடம் :

வறண்ட மற்றும் ஈர இலையுதிர் காடுகளில் இயற்கையாக வளரும் தன்மை கொண்டது.

மண் :

நீர் தேங்காத தன்மை கொண்ட மண், உப்புதன்மை குறைவான உவர்நிலங்களிலும், களிமண்ணிலும், செம்பொறை மண்ணிலும் மற்றும் கரிசல் மண்ணிலும் நன்கு வளரும் தன்மையுடையது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1500 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

640 – 3000 மி.மீ

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மையற்றது.
  • மறுதாம்பு முறை மூலம் நன்கு தழைத்து வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


இயற்கை மறு உருவாக்கம்:

  • இவை இயற்கையாக விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

செயற்கை மறு உருவாக்கம்: 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

இனப்பெருக்கம்:

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

  • நெற்றானது ஏப்ரல் - மே மாதத்தில் முற்றிவிடும். எனவே ஏப்ரல் - மே மாதங்களில் நெற்றுகள் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்று வெயிலில் உலர்த்தப்பட்டு விதைகள் சேகரிக்கப்படுகிறது.
  • சுத்தப்படுத்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
  • உலர்த்தப்பட்ட இடங்கள் நெற்று காய வைப்பதற்கு ஏற்றதாகும்.
  • ஒரு கிலோ விதையில் 15000 விதைகளிருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 47 சதவிகிதம் ஆகும்.
  • ஒரு கிலோ விதையில் குறைந்தது 7255 நாற்றுகளை உற்பத்தி செய்யலாம்.

விதை நேர்த்தி

  • குளிர்ந்த நீரில் 24 மணிநேரம் ஊர வைக்க வேண்டும்.

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

  • விதையானது நேரடியாக தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது.
  • பொதுவாக ஏப்ரல் மாதம் தாய்பாத்தி விதைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 10 நாள் முடிவில் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
  • நாற்றானது 15 – 30 செ.மீ அளவு வளர்ந்தவுடன் வளர் இடுபொருட்களடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • களைகளை நீக்குவதால் நாற்றின் வளர்ச்சி சற்று துரிதமாக இருக்கும்.
  • விதைகளை நேரடியாக பாலித்தீன் பைகளிலும் விதைக்கலாம்.
  • 4 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

நேரடி விதைப்பு:

  • நேரடி விதைப்பு முறையில் விதைகளானது 1.5 செ.மீ இடைவெளியில் விதைக்கப்படுகிறது.
  • நேரடி விதைப்பிற்கு ஜுலைசெப்டம்பர் மாதம் உகந்ததாகும்.
  • வறண்ட நிலப்பகுதி மற்றும் குறைவான மழையளவு உள்ள பகுதிகளுக்கு இம்முறை ஏற்றதல்ல.

நாற்று நடவு முறை :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • ஜுலை மாதத்;தில் நடவு பணிகள் மேற்கொள்வது சிறந்ததாகும்.
  • வறண்ட நிலப்பகுதியில் குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும். இடைவெளியானது  3 x 3 மீ என இருக்க வேண்டும்.      

  • முதலாம் ஆண்டில் மூன்று முறை களையெடுத்தலும் மற்றும் இரண்டு முறை உழுதலும் அவசியமாகும்.
  • இரண்டாம் ஆண்டில் இரண்டு முறை களையெடுத்தலும் மற்றும் இரண்டு முறை உழுதலும் அவசியமாகும்.

  • 15 – 20 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 3700 - 4000 à®°à¯‚பாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

 

ஊடுபயிர் சாகுபடி :

  • தேயிலை மற்றும் காபி பயிர்களை ஊடுபயிராக பயரிடலாம்.

முக்கிய பயன்கள் :

  • இம்மரம் கட்டுமான பணிகளுக்கு பயன்படுகிறது.
  • மேலும் உள் கட்டுமான பணிகளுக்கு இதன் மரம் பயன்படுகிறது.
  • தூண்கள், மாட்டுவண்டியின் பாகங்கள், வேளாண் உபகரணங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • இதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
  • அலங்கார மாமாகவும் பயன்படுகிறது.

  • இலைகள் பசுந்தீவனமாக பயன்படுத்தலாம்.
  • இது சாலை ஓரமாகவும், எரிபொருளாகவும் பயன்படுகிறது.

-->