பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

மஞ்சரளி


அறிவியல் பெயர் :

டெக்கோமா ஸ்டேன்ஸ்

பொதுப்பண்பு :

  • 15 – 20 அடி உயரம் வரை வளரக்கூடிய சிறிய மரமாகும்.
  • இதன் மலர்கள் வெளிர் மஞ்சள் நிறமுடையது.
  • இதன் நெற்றானது பீன்ஸ் போன்ற வடிவமுடையது. முதிர்ந்த நெற்றானது அடர் சாம்பல் நிறமுடையது.

பரவல் :

வாழிடம் :

ஆற்றுப்படுகை ஓரங்களில் அதிகம் வளர்கிறது.

மண் :

மணற்பாங்கான களிமண்

மண் pH :

6.5 -7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

2000 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

600 – 1100 மி.மீ

வெப்பநிலை :

20 - 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • வறட்சியை தாங்கி வளரக்கூடியது. ஆனால் பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

  • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
  • உலர்த்தப்பட்ட நெற்றிலிருந்து விதைகள் பிரித்தெடுக்கப்படுகிறது.
  • விதைகள் அதிக நாட்கள் முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையுடையது.
  • விதை முளைப்புத்திறன் 20 – 60 சதிவிகிதமாகும்.

  • குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பானது மார்ச் - ஏப்ரல் கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
  • 2 இலைகள் துளிர்விட்ட பிறகு பைக்கு ஒரு நாற்றுகளை பிடுங்கி மற்றொரு பாலித்தீன் பையில் நடப்படுகிறது.
  • 6 மாதமான நாற்று நடவிற்காக பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 அல்லது 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.

  • அவ்வப்போது பக்க கிளைகளை நீக்குவது அவசியமாகும்.

முக்கிய பயன்கள் :

  • அதன் மலர்களுக்காக இம்மரம் அதிகமாக வளர்க்கப்படுகிறது.
  • அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.
  • உயிர் வேலியாக இம்மரம் வரப்போரங்களில் வளர்க்கப்படுகிறது.

அழகுசாதனம்:

  •  இதன் பூக்கள் அழகு சாதனபொருட்களாகப் பயன்படுகிறது.

தடை:

  • இம்மரம் உயிரி வேலியாகப் பயன்படுகிறது.

-->