பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

பூவங்கொட்டை மரம்


அறிவியல் பெயர் :

சாப்பின்டஸ் எமர்ஜினேட்டஸ்

பொதுப்பண்பு :

  • பொரிய அகன்ற கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும்.
  • மரப்பட்டையானது சாம்பல் நிறமுடையது.
  • அதிக எண்ணிக்கையிலான இருபால் மலர்களையுடையது.
  • கனியானது கருமை நிற விதைகளை கொண்டது.

பரவல் :

  • இந்தியாவை தாயகமாக கொண்ட மரமாகும். ஆனால் இந்தியா முழுவதும் பரவிக்காணப்படுகிறது.

வாழிடம் :

இலையுதிர் காடுகள் மற்றும் புல்வெளிப்பகுதிகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

6-6.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1200 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

500 – 2000 மி.மீ

வெப்பநிலை :

32 - 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • பனியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த கனியானது பிப்ரவரி - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • கனியானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
  • விதைகள் 2 வருடம் வரை முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும்.
  • ஒரு கிலோ விதையில் 2000 - 2500 விதைகளிருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 60 – 70 சதிவிகிதமாகும்.
  • நாற்று முளைப்புத்திறன் 60 – 62 சதிவிகிதமாகும்.

  • தேவையில்லை

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • தாய்பாத்தி விதைப்பு மார்ச் - ஏப்ரல் மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
  • விதைக்கப்பட்ட விதைகள் ஒரு வாரத்தில் முளைக்கத்துவங்குகிறது. ஒரு மாதத்திற்குள் அனைத்து விதைகளும் முளைத்துவிடுகிறது.
  • தாய்பாத்தியை தினமும் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
  • 3 – 4 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • 3 – 4 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.

  • தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.

 

  • 10 - 25 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 2600 – 3000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

ஊடுபயிர் சாகுபடி :

ஊடு பயிராக பயிறு வகைப் பயிர்களைப் பயிரிடலாம்.

 

 

முக்கிய பயன்கள் :

  • இம்மரத்தின் காயானது சோப்பு விதைகள் என்ற பெயரில் பரவலாக விற்க்கப்படுகிறது.
  • காய்கள் பட்டை சுத்தம் செய்ய பயன்படுகிறது.
  • இதன் மரம் சிறிய ரக மரச்சாமான்கள் செய்ய பயன்படுகிறது.

கனிகள்:

  • இவை அஜீரணம், ஆஸ்துமா, வயிற்றுபோக்கு, வாதம் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.

-->