பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

நிங்கள்


அறிவியல் பெயர் :

பெலிசியம் டெசிபியன்ஸ்

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய மரமாகும்.
  • இலைகள் குழுமமாக அமைந்திருக்கும். ஒரு குழுமத்தில் 4 – 6 இலைகளிருக்கும். இலைகள் எதிரெதிராக அமைந்திருக்கும்.
  • பூக்கள் சிறியது, அதிக எண்ணிக்கையிலானது மற்றும் ஒருபால் மலர். பூக்கள் 6 – 8 இன்ச் நீளமுடையது.
  • காய்கள் டுரூப் வகையை சேர்ந்தது மற்றும் வட்ட வடிவமுடையது. காய்கள் பளபளக்கும் ஆரஞ்சு நிறமுடையது.

பரவல் :

  • இம்மரம் மேற்கு தொடர்ச்சி மலையை தாயகமாகக் கொண்டது. இம்மரம் பரவலாக கிழக்கு இந்திய பகுதிகள், இலங்கை மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகம் வளர்கிறது.

வாழிடம் :

அதிக ஒப்புமை ஈரப்பதம் கொண்ட பகுதிகள் மற்றும் வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் வளரும்.

மண் :

களிமண்ணில் அதிகம் வளரும் தன்மையுடையது. அதிக நீர் தேங்காதவாறு மண்ணின் தன்மை இருக்க வேண்டும்.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.
  • உப்பு தன்மையான நிலங்களில் வளரக்கூடியது.

வளரியல்பு :

பசுமை மாறா மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
  • உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.

  • கொதிக்கவைக்கப்பட்ட இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து விதை நேர்த்தி செய்யப்படுகிறது.

  • விதைகள் நேரடியாக வளர்ஊடகம் இடப்பட்ட பாலித்தீன் பை அல்லது ரூட் டிரெயினரில் விதைக்கப்படுகிறது.
  • புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் 80 சதவிகிதம் முளைக்கக்கூடியது. இவ்விதைகள் 8 – 15 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
  • 7 மாதமான நாற்றுகள் அல்லது 6 – 10 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  • அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.

  • நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.

முக்கிய பயன்கள் :

  • அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.
  • நிழல் தரும் மரமாக வளர்க்கப்படுகிறது.
  • பூங்கா மற்றும் தோட்டங்களில் நிழல் தரும் மரமாக வளர்க்கப்படுகிறது.