பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

வெள்வேல் மரம்


அறிவியல் பெயர் :

அக்கேசியா லூக்கோபுளோயா

பொதுப்பண்பு :

  • உயரமாக வளரக்கூடிய முட்களையுடைய மரமாகும்.
  • மரப்பட்டையானது வெள்ளை நிறமாகவோ அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகவோ காணப்படும்.
  • நெற்றானது பழுப்பு நிறத்தில் காணப்படும்.

பரவல் :

  • இந்தியாவின் வறண்ட நிலப்பகுதிகளில் அதிகம் வளர்கின்றது.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் வளரும் மரமாகும்.

மண் :

மணற்பாங்கான செம்மண், களிமண், களிமண்கூடிய அடைநிலம் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றில் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

800மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

400 – 1500 மி.மீ

வெப்பநிலை :

6 - 49 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • ஒளி விரும்பி மரமாகும்.
  • வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்மாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


வளர்ச்சி :

வேகமாக கொண்டது.

உயரம் :

20மீ உயரம் வரை வளரக்கூடியது.

இயற்கை மறு உருவாக்கம்:

  • மழை பருவ காலத்திற்கு மன்னதாகவே இதன் விதைகள் முளைத்துவிடும் தன்மை கொண்டது.

செயற்கை மறு உருவாக்கம்: 

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

இனப்பெருக்கம்:

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

  • இம்மரம் வருடத்திற்கு ஒரு முறை பூத்து காய்க்கவல்லது.
  • நெற்றானது ஏப்ரல் - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
  • விதைகள் சுத்தம் செய்யப்பட்டு பாலித்தீன் பைகளில் சேகரிக்கப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் தேராயமாக 37000 - 49000 விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 30-50 சதவிகிதம் ஆகும்.

விதை நேர்த்தி

  • குளிர் நீரில் 25 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

  • 10 x 20 செ.மீ அல்லது 13 x 25 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் வளர் ஊடகங்களை நிறப்பி, அதில் பைக்கு 2 விதைகள் என விதைக்கப்பட வேண்டும். விதையானது 1.5 செ.மீ ஆழத்தில் விதைக்கப்பட வேண்டும்.
  • ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க துவங்கி 15 நாட்கள் முடிவில் முற்றிலும் முளைத்துவிடுகிறது.
  • பைக்கு ஒரு நாற்று வீதம் பிடுங்கி மாற்ற நாற்றுகளற்ற பைக்கு மாற்றப்படுகிறது.
  • நாற்றுகளுக்கு தினமும் தண்ணீர் தெளிப்பது அவசியமாகும்.
  • 4 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு தயாராகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  • இடைவெளியானது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.

  • வருடத்திற்கு ஒரு முறை களையெடுத்தல் மற்றும் நிலம் உழுதல் அவசியமாகும்.
  • மரப்பண்ணையானது களைகளற்றதாகவும், மழை பெய்தால் நீர் தேங்காத வண்ணமும் இருத்தல் அவசியம்.
  • நீர் பாய்ச்ச ஏதுவாக வாய்க்காலை மேடான பகுதியிலிருந்து பள்ளமான பகுதி நோக்கி அமைக்க வேண்டும்.

  • 30 - 40 வருடங்கள்

ஊடுபயிர் சாகுபடி :

பயிறுவகை பயிர்கள் மற்றும் தீவனப்புற்களை ஊடுபயிரிடலாம்.

முக்கிய பயன்கள் :

கால்நடை தீவனம் :

  • இளம் இலைகள் மற்றும் இளம் நெற்றுகள் ஆடுகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
  • தமிழகத்தில் காங்கேயம் பகுதிகளில் இம்மரத்தின் நெற்றுகள் கால்நடைகளுக்கு முக்கிய தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

நார்கள் :

  • இதன் பட்டையிலிருந்து எடுக்கப்படும் நார் கயிறு தயாரிக்கவும். மீன் வலைகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

மரக்கட்டை:

  • இதன் மரம் நீடித்து உழைக்கக்கூடியது. எனவே இதன் மரங்கள் இரயில் தண்டவாளங்கள் தாங்கும் கட்டைகள் அமைக்க, கைப்பிடிகள் தயாரிக்க, வேலி கம்பம் தயாரிக்க மற்றும் வேளாண் உபகரணங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
  • காகிதகூழ் தயாரிக்கவும் மற்றும் காகிதம் தயாரிக்கவும் பயன்பணடுகிறது.