பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

நெல்ரை


அறிவியல் பெயர் :

அக்ரோகார்பஸ் பிராக்சினிபோலிஸ்

பொதுப்பண்பு :

  • இது ஒரு பெரிய இலையுதிர் மரமாகும்.
  • இலைகள் நல்ல பிரகாசமான சிவப்பு நிறத்தில் காணப்படும்.
  • இதன் மரம் மெல்லியது மற்றும் வெளிர் பழுப்பு நிறமுடையது.
  • மலர்கள் அடுக்காக அமைந்திருக்கும் மற்றும் வெள்ளை நிறம் கொண்டது.
  • கனிகள் மெல்லியது மற்றும் அடர் பழுப்பு நிறமானது.
  • விதைகள் சிறியதாகவும், பழுப்பு நிறமாகவும் காணப்படும்.

பரவல் :

  • இம்மரம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை தாயகமாக கொண்டது.
  • இவை தென்னிந்தியாவில் அதிகம் காணப்படுகிறது.

வாழிடம் :

வெப்பமண்டல பசுமை மாறா காடுகளில் வளரும் மரமாகும்.

மண் :

செம்மண், மணற்பாங்கான செம்மண், இரும்பொறை மண், சரளை மண், களிமண், களிமண்கூடிய அடைநிலம், கடலோர வண்டல் மண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றில் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1200 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1200 – 2000 மி.மீ

வெப்பநிலை :

35 - 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.

  • பனியை தாங்கி வளரக்கூடிய தன்மையற்றது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


வளர்ச்சி :

வேகமாக கொண்டது.

உயரம் :

35 மீ உயரம் வரை வளரக்கூடியது.

  • இவை விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • இம்மரம் வருடத்திற்கு ஒரு முறை பூத்து காய்க்கவல்லது.
  • நெற்றானது ஏப்ரல் - ஜுன் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படுகிறது.
  • விதைகள் சுத்தம் செய்யப்பட்டு பாலித்தீன் பைகளில் 19 மாதங்கள் வரை முளைப்புத்திறன் குறையாமல் சேகரித்து வைக்கலாம்.
  • ஒரு கிலோ விதையில் தேராயமாக 27000 - 32000 விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 50 - 75 சதவிகிதம் ஆகும்.

 

  • கொதிக்கவைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 10 நிமிடம் ஊர வைக்க வேண்டும்.

 

  • விதையானது தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • இரண்டு விதைகள் துளிர்விட்ட நாற்றானது பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது.
  • விதை முளைப்புத்திறனானது 50 – 75 சதவிகிதமாகும்.
  • நாற்றிற்கு தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

நாற்று நடவு முறை :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது
  • இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.

  • நடப்பட்டதிலிருந்து ஒரு மாதத்திற்கு பின்பு களைகள் எடுத்தல் மற்றும் உழுதல் மேற்கொள்ள வேண்டும். பின் வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும்.

  • எரிபெருளுக்காக 10 - 15 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • இம்மரம் தோராயமாக 2200 - 2500 ரூபாய் என்ற விலைக்கு விற்க்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

ஊடுபயிர் சாகுபடி :

  • தேயிலை போன்ற மலைப் பயிர்களுக்கு நிழல் தரும் மரமாகப் பயன்படுகிறது.

முக்கிய பயன்கள் :

  • இதன் இளம் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
  • இம்மரம் பூக்கள் அதிகம் வைப்பதினால், தேனீ வளர்ப்புக்கு பயன்படுகிறது.
  • இம்மரம் மரச்சாமான்கள் செய்யவும், மேஜைகள் செய்யவும் மற்றும் கட்டுமான பணிகளுக்கும் பயன்படுகிறது