பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

ஆச்சா மரம்


அறிவியல் பெயர் :

பாகுனியா ரெசிமோசா

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.
  • மரப்பட்டையானது நீளம் கலந்த கருப்பு நிறமுடையது.
  • பூக்கள் சிறியது மற்றும் வெள்ளை நிறமுடையது.
  • நெற்றானது அடர் சாம்பல் நிறமுடையது. ஒவ்வொரு நெற்றிலும் 12 – 30 விதைகளிருக்கும்.
  • விதைகள் அடர் சிவப்பு கலந்த சாம்பல் நிறமுடையது.

பரவல் :

  • இந்தியா முழுதும் பரவலாக காணப்படுகிறது.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

நல்ல நீர் தேங்கா தன்மை கொண்ட மண்ணில் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

4.5-7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

750 - 2200 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1000 – 5000 மி.மீ

வெப்பநிலை :

38 – 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • அதிக ஒளி விரும்பி மரமாகும்.
  • பனி மற்றும் வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • விதைகள் மூலம் குறைந்தளவு இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த நெற்றானது ஜனவரி - மார்ச் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
  • ஒரு கிராம் விதையில் 7 – 8 விதைகளிருக்கும்.
  • விதைகள் ஒரு வருடம் வரை முளைப்புத்திறனை தக்க வைத்துக்கொள்ளும்.
  • விதை முளைப்புத்திறன் 60 – 70 சதிவிகிதமாகும்.

  • விதைகள் குளிர் நீரில் 24 மணிநேரம் ஊர வைக்கப்பட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.

  • விதைகள் வளர் ஊடகம் நிரப்பப்பட்ட பாலித்தீன் பைகளில் விதைக்கப்படுகிறது.
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் பூவாளி கொண்டு நீர் இறைக்கப்படுகிறது.
  • நாற்று பை களைகளின்றி பாதுகாக்கப்படகிறது.
  • 6 மாதமான நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலம் தொடங்கியபின் விதைகள் நேரடியாகவே நிலத்தில் விதைக்கப்படுகிறது.

நாற்றுகள் நடவு முறை :

  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் ஜுலை மாதத்தில் எடுப்பது சிறந்ததாகும்.
  • வறண்ட பகுதிகளில் குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.
  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

  • களையெடுத்தல் மற்றும் நிலத்தை உழுதல் அவசியமாகும்.

  • 20 – 70 வருடங்கள்
  • இலைகள் கால்நடை தீவனமாக வருடத்தில் இரு முறை சேகரிக்கப்படுகிறது. ஏப்ரல் - மே மற்றும் செப்டம்பர் - அக்டோபர் ஆகிய பருவங்களில் இலைகள் சேகரிக்கப்படுகிறது.
  • இலைகள் உற்ப்திக்காக 3 வருடத்திற்கு ஒரு முறை மரத்தின் மேல் கிளைகள் வெட்டப்படுகிறது.

முக்கிய பயன்கள் :

  • இம்மரம் விறகிற்காக பயன்படுத்தப்படுகிறது.
  • மரப்பட்டையிலிருந்து சாயம் எடுக்கப்படுகிறது. மேலும் மரப்பட்டை நார்கள் உற்பத்திக்கும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.
  • இம்மரம் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
  • இதன் இலைகள் பீடி தயாரிக்க பயன்படுகிறது.
  • இம்மரம் வேளாண் உபகரணங்கள் தயாரிக்க பயன்படுகிறது.