பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

சரக்கொண்றை


அறிவியல் பெயர் :

கேசியா பிஸ்டுலா

பொதுப்பண்பு :

  • 8 – 12 மீ உயரம் வரை வளரக்கூடிய சராசரி அளவுடைய பெரிய அகன்ற கிளைகளையுடைய இலையுதிர் மரமாகும்.
  • மரப்பட்டை மென்மையானது மற்றும் இளமையில் பச்சை கலந்த சாம்பல் நிறமாகவும் முதிர்ந்த பின் அடர் சாம்பல் நிறமாகவும் மாற்றமடைகிறது.
  • முதிர்ந்த நெற்று 30 – 60 செ.மீ நீளமுடையது மற்றும் ஒவ்வொரு நெற்றிலும் 40 – 100 விதைகளிருக்கும்.
  • பூக்கள் வெளிர் மஞ்சள் நிறமுடையது.
  • இம்மரம் இயற்கையாகவே சந்தன மரத்திற்கு ஒட்டுண்ணி தாவரமாக பயன்படுகிறது.

பரவல் :

  • இம்மரம் இந்திய பகுதிகளில் பலவிக் காணப்படுகிறது.

வாழிடம் :

வெப்பமண்டல மற்றும் இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கின்றது.

மண் :

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

5.5 (ம)7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1220 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

750 – 1900 மி.மீ

வெப்பநிலை :

35 – 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • வறட்சி மற்றும் பனியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மற்றும் மறுதாம்பு மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
  • விதைகள் நெற்றிலிருந்து தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • விதைகள் நீண்ட நாட்களுக்கு முளைப்புத்திறனை தக்க வைத்துகொள்ளும் தன்மையுடையது.
  • விதை முளைப்புத்திறன் 22 – 60 சதிவிகிதமாகும்.
  • நாற்று வளர்ச்சி திறன் 12 – 47 சதவிகிதமாகும்.

  • கொதிக்கவைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 5 நிமிடம் ஊர வைத்து நேர்த்தி செய்யப்படுகிறது.

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. விதைகள் விதைப்பு மார்ச் - ஏப்ரல் மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 10 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • தாய்பாத்தியை களைகளின்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • நாற்றுகள் இரண்டு இலைகள் துளிர்ந்த பிறகு வளர் ஊடகம் நிரப்பப்பட்ட பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • 6 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  • அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 3 x 3 மீ மற்றும் 5 x 5 மீ என இருக்க வேண்டும்.

  • களையெடுத்தல் மற்றும் உழுதல் அவசியமாகும்.

<!-- [if gte mso 9]>