பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

அத்தி மரம்


அறிவியல் பெயர் :

பைகஸ் குளோமரேட்டா

பொதுப்பண்பு :

  • பரந்த கிளைகளையுடைய பசுமை மாறா அல்லது இலையுதிர் மரமாகும்.
  • கிளைகள் ஒழுங்கான வடிவமுடையது மற்றும் இதன் அடிமரம் தடிமனாக காணப்படும்.
  • மரப்பட்டை சாம்பல் நிறமுடையது. மரம் மென்மையானது. இதன் வயதான பட்டைகள் உதிர்ந்து விழக்கூடியது.
  • இலைகள் அடுத்தடுத்து அமைந்து காணப்படும். சுருள் வடிவில் அமைந்திருக்கும். இலைகள் அடர் பச்சை நிறமுடையது.

பரவல் :

 

  • இம்மரம் இந்தியா முழுவதும் பரவிக்காணப்படுகிறது.

 

வாழிடம் :

குறைந்தளவு கடல்மட்ட உயரம் கொண்ட அனைத்து காடுகளிலும் வளரும் தன்மையுடையது.

மண் :

நீர் தேங்காத தன்மை கொண்ட ஆழமான வண்டல் கலந்த செம்மண்ணில் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

5-7

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1200 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

500 – 5000 மி.மீ

வெப்பநிலை :

16 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • ஒட்டு நாற்று உற்பத்தி மூலம் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த காய்கள் சேகரிக்கப்பட்டு நீரில் பிழியப்படுகிறது.
  • பிழியப்பட்ட நீரில் மிதக்கும் விதைகள் சேகரிக்கப்படுகிறது.
  • சேகரிக்கப்பட்ட விதைகள் காகிதம் மீது நிழலில் காய வைக்கப்படுகிறது.
  • காய வைக்கப்பட்ட விதைகள் சுத்தமான பாலித்தீன் பையில் சேமித்து வைக்கப்படுகிறது.

  • குளிர் நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து நேர்;த்தி செய்ய வேண்டும்.

  • தாய்பாத்தியானது செம்மண் மற்றும் மணல் கலந்த கலவை கொண்டு தயார் செய்யப்படுகிறது.
  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக தூவப்படுகிறது.
  • விதைக்கப்பட்ட 2 வாரத்தில் விதைகள் முளைக்கத்துவங்குகிறது.
  • 2 இலைகள் துளிர்விட்டபின் நாற்றுகள் பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • நாற்றுகள் வளர் இடுபொருட்கள் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்பட்டபின் நிழலில் ஒரு வாரத்திற்கு வைக்கப்பட வேண்டும்.
  • நாற்றுகளுக்கு அதிகப்படியான நீர் தெளிக்கக்கூடாது. அதிகப்படியான நீரை தாங்கி வளரும் தன்மையற்றது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும். ஜுலை மாதத்தில் நடவிற்காக குழியெடுப்பது சிறந்ததாகும்.
  • வறண்ட பகுதிகளுக்கு குழியின் அளவு 60 செ.மீ3 என இருக்க வேண்டும். இடைவெளியானது 5 – 10 மீ என இருக்க வேண்டும்.
  • மழை பொழிவிற்கு பின் நடவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

  • அவ்வப்போது களையெடுத்தல் மற்றும் மண்ணை உழுதல் அவசியமாகும்.

முக்கிய பயன்கள் :

உணவுப்பயன்பாடு :

  • இதன் காய்கள் வறண்ட பஞ்ச காலங்களில் உணவாக உண்ணப்பட்டது.

கால்நடை தீவனம் :

  • இம்மரத்தின் இலைகள் யானை, ஒட்டகம், ஆடு மற்றும் கால்நடைகளுக்கு ஒரு மிகச்சிறந்த தீவனமாகும்.
  • இலைகளில் 10 – 14 சதவிகித புரோட்டீன் உள்ளது. இவை எளிதாக மெல்லக்கூடியதாகவும், செரிமானமடையக்கூடியதாகவும் உள்ளதால் விலங்குகள் இதனை விரும்பி உண்ணுகின்றன.

விறகு பயன்பாடு :

  • இம்மரம் விறகிற்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

மரம் :

  • இம்மரம் ஓரளவு வலிமையானதாகும்.
  • இம்மரம் பெட்டிகள் தயாரிக்க, மலிவான பலகைகள்  தயாரிக்க, கரண்டி தயாரிக்க மற்றும் மரகிண்ணம் தயாரிக்க பயன்படுகிறது.