பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

அச்சி நரிவிழி


அறிவியல் பெயர் :

கார்டியா செபஸ்டியானா

பொதுப்பண்பு :

  • 25 அடி உயரம் வரை வளரக்கூடிய சிறிய பசுமை மாறா மரமாகும்.
  • பூக்கள் இளஞ்சிவப்பு நிறமுடையது.
  • இதன் இலைகள் அடர் பச்சை நிறமுடையது மற்றும் உப்பு காகிதம் போன்று சொரசொரப்பானது.
  • காயானது வெள்ளை நிறமுடையது மற்றும் வட்ட வடிவமானது. ஒவ்வொரு காயிலும் 2 – 4 விதைகள் இருக்கும்.

பரவல் :

  • இம்மரம் இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்ட மரமாகும். இம்மரம் அலங்கார மரமாகவும், தோட்டங்களில் நிழல் தரும் மரமாகவும் வளர்க்கப்படுகிறது.

வாழிடம் :

500 மீ குறைவான கடல்மட்ட உயரம் கொண்ட நீர் ஓடும் பகுதிகளின் ஓரங்களில் அதிகம் வளரும் தன்மை கொண்டது.

மண் :

பாறை மண் மற்றும் பறை மண் நிறைந்த கடற்கரையோரங்களில் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

185 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

500 – 1500 மி.மீ

வெப்பநிலை :

சராசரி வெப்பநிலையில் வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வறட்சியை தாங்கி வளரக்கூடியது. ஆனால் பனியை தாங்கி வளரும் தன்மையற்றது.
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதலை எதிர்த்து வளரும் தன்மையற்றது.

வளரியல்பு :

வெப்பநிலையை பொறுத்து தன்மை வேறுபடுகிறது.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த நெற்றானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
  • உலர்த்தப்பட்ட விதைகள் பாலித்தீன் பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது.

  • கொதிக்கவைக்கப்பட்ட இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைத்து விதை நேர்த்தி செய்யப்படுகிறது.

  • விதைகள் நேரடியாக வளர்ஊடகம் இடப்பட்ட பாலித்தீன் பை அல்லது ரூட் டிரெயினரில் விதைக்கப்படுகிறது.
  • புதிதாக சேகரிக்கப்பட்ட விதைகள் 80 சதவிகிதம் முளைக்கக்கூடியது. இவ்விதைகள் 8 – 15 நாட்களில் முளைக்க துவங்குகிறது.
  • 7 மாதமான நாற்றுகள் அல்லது 8 – 10 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • குழிகள் வெயிலில் உலர்த்துவதற்காக நடவிற்கு முன்பே எடுக்கப்படுகிறது.
  • அலங்கார மரமென்பதால் மரங்களுக்கிடையயேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.

  • நடப்பட்டதிலிருந்து 2 வருடத்திற்கு களையெடுத்தல் அவசியமாகும்.

முக்கிய பயன்கள் :

  • இதன் காய் காய்ச்சலை குணப்படுத்த பயன்படுகிறது.
  • இதன் இலைகள் உப்பு காகிதம் போன்று பொருட்களை பளபளப்பாக்க பயன்படுகிறது.
  • இதன் மரம் கடினமானது. எனவே மர உபயோக பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.