நாவல்
அறிவியல் பெயர் :
சைசிஜியம் குமினி
பொதுப்பண்பு :
- அகன்ற கிளைகளையுடைய பெரிய பசுமை மாறா மரமாகும்.
- மரப்பட்டை சாம்பல் நிறமுடையது.
- இலையானது அடர் பச்சை நிறமாகவும், பூக்கள் பச்சை கலந்த வெளிர் நிறமாகவும் காணப்படும். இம்மரம் வெண்ணிற தோல் போத்திய கருமையான விதையை கொண்டது.
- விதையின் அளவு ஒன்றுக்கொன்று மாறுபடுகிறது.
பரவல் :
- இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது.
வாழிடம் :
வெப்பமண்டல பசுமைமாறாக்காடுகளிலும், இலையுதிர் காடுகளிலும் காணப்படுகிறது.வெப்பமண்டல பசுமைமாறாக்காடுகளிலும், இலையுதிர் காடுகளிலும் காணப்படுகிறது.வெப்பமண்டல பசுமைமாறாக்காடுகளிலும், இலையுதிர் காடுகளிலும் காணப்படுகிறது.
மண் :
இம்மரம் சிவப்பு செம்பொறை மண்ணிலும், மணற்பாங்கான செம்மண்ணிலும் வளரும்.
மண் pH :
6.0 – 6-5
கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :
1800மீ உயரம் வரை வளரக்கூடியது.
மலையளவு :
1500 – 1000 மி.மீ
வெப்பநிலை :
30-43.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
நிலப்பரப்பு :
சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
மரப்பண்பு :
- இது நிழல் வரும்பி மற்றும் உறைபனியை தாங்கி வளரக்கூடியது.
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
- மறுதாம்பு நன்கு தழைத்து வளரக்கூடியது.
வளரியல்பு :
இலையுதிர் மரமாகும்.
தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்
வளர்ச்சி :
மிதமானது
உயரம் :
35மீ
இயற்கை மறு உருவாக்கம்:
- நல்ல வளமான மண்ணில் நன்கு வளரக்கூடியது.
- ஒவ்வொரு கனியிலிருந்தும் 1 – 5 கன்றுகள் உருவாகின்றன.
செயற்கை மறு உருவாக்கம்:
- நேரடி விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.
விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:
- விதையானது ஜுன் - ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
- சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
- விதை முளைப்புத்தின் மிகவும் குறைவாகும்.
- விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும்.
- ஒரு கிலோ விதையில் 1100 - 1800 விதைகள் இருக்கும்.
- விதை முளைப்புத்திறன் 20-90 சதவிகிதம் ஆகும்.
விதை நேர்த்தி :
- கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 10 நிமிடம் ஊர வைக்க வேண்டும்.
மரப்பண்ணை தொழில்நுட்பம்:
- விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பு ஜுலை – ஜுன் மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
- விதையானது 2 – 2.5 செ.மீ ஆழத்தில் விதைக்கப்படுகிறது.
- விதைக்கப்பட்டதிலிருந்து இரண்டு வாரங்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
- 2 – 5 நாற்றுகள் ஒரு கனியிலிருந்து உருவாகிறது.
- இரண்டு இலைகள் துளிர்ந்த பிறகு நாற்றானது வளர் ஊடகம் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
- ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.
பெருந்தோட்ட தொழில் நுட்பம் :
நேரடி விதைத்தல்:
- இது ஒரு மிக எளிமையான மற்றும் குறைந்த செலவுடைய முறையாகும்.
- வரிசையாக விதைக்கப்படுகிறது. களையெடுத்தல் குறிப்பிட்ட இடைவெளியில் நடைபெறுகிறது.
- நிழல் மற்றும் ஈரப்பதம் மிக அவசியமானதாகும்.
நாற்றுகள் நடவு :
- ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்கு ஏற்றதாகும்.
- மழை பருவத்தில் நடவ பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
- பொதுவாக 5 x 5 மீ இடைவெளியானது பயன்படுத்தப்படுகிறது.
- அலங்காரத்திற்கு நடப்படும்பொழுது 12 அல்லது 14 மீ இடைவெளி பின்பற்றப்படுகிறது. குhற்று தடுப்பானுக்கு 6 மீ இடைவெளி பயன்படுத்தப்படுகிறது.
துண்டு முறை நாற்று நடவு:
- இம்முறைக்கு 90 செ.மீ தண்டு பயன்படுத்தப்படுகிறது.
- இம்முறை நாற்று உற்பத்தி 90 சதவிகிதம் வெற்றியை தரவல்லது.
- இம்முறையில் பெறப்படும் நாற்றின் மகசூல் மிகவும் குறைவாக இருக்கும்.
- தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் நாற்று நன்கு வளர துணை புரிகிறது.
சந்தை மதிப்பு :
- ஒரு டன் மரம் 3000 – 3500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது
முக்கிய பயன்கள் :
- இது ஒரு நிழல்தரும் மரமாக பயன்படுத்தப்படுகிறது.
- இதன் கனிகள் உண்ணக்கூடியதாகும்.
- இதன் பட்டை டானின் எடுக்க பயன்படுகிறது.
- இதன் இலை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
- இதன் மரம் கட்டுமான பணிகளுக்கும், மரச்சாமான்கள் செய்யவும் மற்றும் படகு செய்யவும் பயன்படுகிறது.
- நிழல்தரும் மரமாக காபி செடிக்கு பயன்படுகிறது.
- வயல்வெளியில் வேலி மரமாகவும் வளர்க்கப்படுகிறது.
-->