பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

சவுக்கு மரம்.


அறிவியல் பெயர் :

கேசுரினா ஜுங்குனியானா

பொதுப்பண்பு :

  • சிறிய அளவுடைய கிளைகளையுடைய பசுமைமாறா மரமாகும்.
  • ஆரம்பத்தில் இதன் கிளைகள் சற்று அகன்று காணப்படும்.
  • இம்மரத்தின் தண்டு நேரான, உருண்டையான கிளைகளற்று 10மீ உயரம் வரை வளரும் தன்மையுடையது

பரவல் :

  • கடற்கரை பகுதிகளிலும், ஆற்றுப்படுக்கைகளிலும் வளரக்கூடியது. இம்மரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வாழிடம் :

கடற்கரை பகுதிகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

நீர் பாசனம் செய்தால் அனைத்து மண்ணிலும் வளரும் தன்மையுடையது.

மண் pH :

2.88-8

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1400மீ உயரம் வரை வளரக்கூடியது.

மலையளவு :

200 – 3500மி.மீ

வெப்பநிலை :

10-35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வேகமாக வளரக்கூடியது. அதிக ஒளி விரும்பி மரமாகும்.
  • கடற்கரை பகுதிகளில் சூரை காற்றினை தாங்கி வளரும் தன்மை கொண்டது.
  • பக்கக்கன்றுகள் மற்றும் மறுதாம்பு மூலம் வளரும் தன்மையற்றது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • இயற்கை விதைகள் மூலம் வளர்வது குறைவு.

 

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • கிலோ விதையில் 5 - 6 லட்சம் விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 30 சதவிகிதம் ஆகும்.
  • விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும்
  • கிலோ விதையில் 30000 – 100000 நாற்றுகளை உற்பத்தி செய்ய முடியும்.

  • தேவையில்லை.

நாற்றாங்கால் தொழில் நுட்பம்:

  • மேட்டுபாத்தியில் விதைகள் விதைக்கப்படுகிறது.
  • பாத்திக்கு 250 கிராம் விதையும் மணல் சேர்த்து தாய்பாத்தியில் விதைக்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்ட பின் மேற்பரப்பில் மணல் கொண்டு மூடப்படுகிறது.
  • தாய்பாத்தி மீது நெல் வைக்கோல் கொண்டு மூடாக்கு அமைக்க வேண்டும்.
  • எறும்புகள் விதைகளை விரும்பி உண்ணுவதால் எறும்புகள் நுழையா வண்ணம் வேதிப்பொருட்களை தாய்பாத்தி சுற்றி தூவ வேண்டும்.
  • விதைகள் விதைக்கப்பட்ட 5 தினங்களில் முளைக்க துவங்குகிறது. 7 வது நாள் மூடப்பட்ட நெல் வைக்கோலை அகற்ற வேண்டும்.
  • நாற்றுகள் பெரிதாக 3 – 4 வாரங்கள் ஆகும்.
  • 4 வாரங்கலான அல்லது 8 – 10 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் வளர் ஊடகம் அடங்கிய பாலித்தீன் பைகளுக்க மாற்றப்படுகிறது.
  • பாத்திக்கு மேலும் சத்துக்களை அளிக்க 2:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு சேர்க்கப்படுகிறது.
  • நாற்றுகள் உற்பத்திக்கு தற்போது பாலிதீன் பைகளுக்கு பதிலாக ரூட் டிரெயினர் பயன்படுத்தப்படுகிறது.

உடல இனப்பெருக்கம் :

  • தேர்ந்தெடுக்கப்பட்ட மரங்களிலிருந்து இளம் சிறிய குறுத்துகள் சேகரிக்கப்படுகிறது.
  • 8 – 10 செ.மீ நீளமுடைய குறுத்துகள் உடல இனப்பெருக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
  • அடிப்பகுதி பெவிஸ்டீன் என்ற வேதிப்பொருள் கொண்டு சுத்திகரிக்கப்படுகிறது.
  • சுத்திகரிக்கப்பட்ட தண்டு ரூட் டிரெயினாரில் உள்ள வளர் ஊடகத்தில் நடப்படுகிறது.
  • 15 – 20 நாட்களில் வேர்கள் வளர துவங்குகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • பருவ மழை சமயத்தில் நாற்றுகள் நேரடியாக நடப்படுகிறது.
  • நடவு நிலத்தை சட்டி கலப்பை கொண்டு உழ வேண்டும்.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 1.5 x 1.5 மீ என இருக்க வேண்டும்.
  • குழிக்கு 10 கிராம் சூப்பர்பாஸ்பேட் சேர்த்து நாற்றுகளை நட வேண்டும்.
  • கரையான் பாதிப்பிலிருந்து தடுக்க கரையான் தடுப்பு வேதிப்பொருள் சேர்க்க வேண்டும். இவை உவர் நிலங்களுக்கு தேவையில்லை.
  • மழை பருவம் இல்லையெனில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மண்ணின் தன்மை பொறுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • நடப்பட்டதிலிருந்து 3, 6, 9 மற்றும் 12ம் மாதங்களில் களையெடுத்தல் அவசியமாகும்.
  • நடப்பட்டதிலிருந்து 12 அல்லது 24 மாதங்களில் இரு முறை பக்க கிளைகளை அகற்ற வேண்டும்.
  • மண்ணின் சத்துக்கள் குறைவாக இருப்பின் நடப்பட்டதிலிருந்து 12 அல்லது 24 மாதங்களில் 100 கிலோ டி..பி இட வேண்டும்.

  • 6 மாதத்திற்கு ஒரு முறை பக்க கிளைகளை நீக்க வேண்டும்.
    தண்டு துளைப்பானால் சவுக்கு மரம் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
    மரம் பாதிக்கப்பட்ட பின் வேதிப்பொருட்கள் கொண்டு கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.
  • சவுக்கு மரம் வில்ட் என்ற நோயினால் அதிகம் பாததிக்கப்படுறது. இந்நோய் ஏற்பட்ட மரம் தண்டு கருமை நிற பொடி சூழ்ந்து காணப்படும். இந்நோய் கட்டுப்படுத்த முடியாது என்பதால் பாதிக்கப்பட்ட மரத்தை வெட்டி எரிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இந்நோய் மற்ற மரங்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.

  • நீர்பாய்ச்சும் பண்ணை காடுகளில் 4 வரடங்களிலும், மேட்டுக்காடுகளில் 6 வருடங்களிலும் அறுவடை செய்யலாம்.
  • இடத்தையும் மண்ணின் தன்மையையும் பொறுத்து அறுவடை காலம் வேறுபடும்.

சந்தை மதிப்பு :

  • இதன் மரம் சதுர அடி 6000 – 7000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

ஊடுபயிர் சாகுபடி :

  • மரத்தின் கிளைகள் அகலமாக வளரும் முன் வேர்க்கடலை, தர்பூசணி மற்றும் கீரை வகைகள் பயிரிடலாம்.
  • எலுமிச்சை வகைகளை ஊடுபயிராகப் பயிரிடலாம்.

முக்கிய பயன்கள் :

மரக்கட்டை:

  • கட்டை கைப்பிடிகள், கம்பங்கள் மற்றும் சக்கரங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

மரக்கூழ்:    

  • இவை காகிதங்கள் தயாரிக்கப் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
    ரேயான் நார்கள் தயாரிக்க பயன்படுகிறது.

 

-->