பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

விளா மரம்


அறிவியல் பெயர் :

லிமோனியா அசிடிசீமா

பொதுப்பண்பு :

  • சிறிய இலைகளை கொண்ட பெரிய இலையுதிர் மரமாகும்.
  • பூக்கள் சிறியது மற்றும் அதிக எண்ணிக்கையிலானது.
  • பழம் பெர்ரி வகையை சேர்ந்தது. மேற்தோல் கடினமானது. தோலினுள்
  • சாம்பல் நிற விதைகள் கொலகொலப்பாக நிறைந்திருக்கும்.
  • இம்மரம் வளம் குறைந்த அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது.
  • இம்மரம் ஒரு சமய முக்கியத்துவம் வாய்ந்த மரமாகும்.
  • இதன் இலைகள் சிவபெருமான் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பரவல் :

  • இந்தியா முழுவதும் பரவிக்காணப்படும் மரமாகும்.

வாழிடம் :

வறண்ட இலையுதிர் காடுகள் மற்றும் மித வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

450 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

800 – 1200 மி.மீ

வெப்பநிலை :

20 - 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

கடல் மட்ட உயரம் குறைவாகவுள்ள நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.
  • பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும் நன்கு வளரும் தன்மையுடையது.

  • நாற்றங்காலில் உடல இனப்பெருக்கம் மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த காயானது மார்ச் - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • காயிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • பிரித்தெடுக்கப்பட்ட விதைகள் நிழலில் காய வைக்கப்படுகிறது.
  • விதைகளை 6 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம்.

  • தேவையில்லை.

  • வேர் வெட்டுத்துண்டுகள் மூலம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • மொட்டுகள் மூலம் நாற்று உற்பத்தி மற்றும் ஒட்டு முறை மூலம் நாற்று உற்பத்தி செய்யப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மெட்டுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றிற்கு 8 x 8 மீ இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது.
  • விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாற்றிற்கு 10 x 10 மீ இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது.
  • குழியின் அளவு 80 - 90 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இந்தியாவில் பிப்ரவரி – மார்ச் அல்லது ஜுலை – ஆகஸ்ட் மாத கால
  • இடைவெளியில் விளா மரம் பயிரிடப்படுகிறது.

மேலாண்மை: 

  • முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நீர்பாசனம்.
  • பயிர் களைதல் மற்றும் மறு நடவு போதுமான பயிர் எண்ணிக்கையை உறுதி செய்ய அவசியமானது.

 

  • மெட்டு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் 5 வருடத்தில் காய்க்க துவங்குகிறது.
  • விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் 8 வருடத்தில் காய்க்கவல்லது.

முக்கிய பயன்கள் :

  • இதன் காய் உண்ணக்கூடியதாகும்.
  • காய் செரிமானத்தை அதிகரிக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
  • காய் இதய சம்மந்மதான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
  • காயினுள் இருக்கும் கொலகொலப்பான கூழ் வயிற்றுப்போக்கை குணப்படுத்த பயன்படுகிறது.