பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

வெள்ளி வசந்த ராணி மரம்


அறிவியல் பெயர் :

தெபுபியா அர்ஜென்டியா

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுள்ள 25 மீ உயரம் வரை பெரிய இலையதிர் மரமாகும்.
  • பூக்கள் மஞ்சள் நிறமுடையது. மணி போன்ற வடிவமுடையது.
  • காயானது நீண்டது மற்றும் அதிக எண்ணிக்கையிலான இறகு போன்ற விதைகளை கொண்டது.

பரவல் :

  • அலங்கார மரமாக இந்தியா முழுதும் அதிகம் வளர்கின்றது.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

பரவலாக அனைத்து மண்ணிலும் வளரும் தன்மை கெண்டது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1200 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

1250 – 2500 மி.மீ

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
  • ஓரளவு வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • சாகதமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • விதைகள் மூலம் மற்றும் உடல இனப்பெருக்கம் மூலம் நாற்று வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த விதையானது மார்ச் - ஏப்ரல் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • காயின் மேல் தோழானது நீக்கப்படுகிறது.
  • தோழ் நீக்கப்பட்ட விதையானது நிழலில் உலர்த்தப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 125000 விதைகளிருக்கும்.

  • தேவையில்லை.

  • விதைகள் வளர் இடுபொருட்களான 2:1:1 மற்றும் 1:1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்ட செம்மண், மணல் மற்றும் எரு அடங்கிய 13 x 25 செ.மீ அளவுடைய பாலித்தீன் பைகளில் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க துவங்குகிறது. 3 வாரத்தில் முற்றிலும் முளைத்து விடுகிறது.
  • 12 – 15 செ.மீ உயரம் வளர்ந்த நாற்றுகள் கட்டுப்படுத்தப்பட்ட நாற்றய்கால் சூழலிருந்து நிலத்திற்கு மாற்றப்படுகிறது. 45 – 60 செ.மீ உயரம் வளர்ந்த நாற்று நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • மழை பருவ காலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • நடவு பணிக்கு முன்னதாக நடவு செய்யப்படவுள்ள நிலத்தை உழு வேண்டும்.
  • குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளி 5 x 5 மீ அல்லது 5 x 6 மீ என இருக்க வேண்டும்.
  • குழியை மேல் கொண்டு மூட வேண்டும்.

  • அலங்கார மரமென்பதால் அவ்வப்போது கவாத்து செய்வது சிறந்ததாகும்.

முக்கிய பயன்கள் :

  • இம்மரம் அழகிய மலர்களை பூக்கவல்லது. எனவே அலங்கார மரமாக வளர்க்கப்படுகிறது.