பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

சிவப்பு குமிழ்மணி மரம்


அறிவியல் பெயர் :

அடினேன்திரா பவோனினா

பொதுப்பண்பு :

  • 6 - 15 மீ உயரம் வரை வளரக்கூடிய பெரிய இலையுதிர் மரமாகும்.
  • மரமானது சாம்பல் அல்லது பழுப்பு நிறமுடையது.
  • இலையின் மேற்பகுதியானது வெளிர் நிறமுடையது மற்றும் அடிப்பகுதி நீலம் கலந்த பச்சை நிறமுடையது.
  • பூக்கள் மஞ்சள் கலந்த வெண்மையானது. பூக்கள் நட்சத்திர வடிவமுடையது.
  • நெற்று நேரானது மற்றும் சாம்பல் நிறமுடையது.

பரவல் :

  • இம்மரம் தென்கிழக்கு சீனா மற்றும் தென்கிழக்கு இந்தியாவை தாயகமாக கொண்டது.
  • இம்மரம் வெப்பமண்டல பகுதிகளில் அறிமுகபடுத்தப்பட்டதாகும்.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளரக்கூடிய மரமாகும்.

மண் :

அனைத்து வகை மண்ணிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. நல்ல வளமான மற்றும் நீர் தேங்காத தன்மை கொண்ட மண்ணில் நல்ல மகசூலை தரவல்லது. அமிலத்தன்மை கொண்ட மண்ணிலும் வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

400மீ உயரம் வரை வளரக்கூடியது.

மலையளவு :

3000 - 5000மி.மீ

வெப்பநிலை :

12 - 36 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

வறண்ட வெப்பமண்டல பகுதிகள் இம்மரம் வளர ஏற்றது.

மரப்பண்பு :

  • அதிக ஒளி விரும்பி மரமாகும்.
  • வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது.

வளரியல்பு :

இது ஒரு இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


  • இயற்கையாக விதைகள் மூலம் இனப்பெருக்கமடையக்கூடியது.

 

  • நேரடி விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • விதையானது டிசம்பர் - பிப்ரவரி மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 3750 விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 75 சதவிகிதம் ஆகும்.
  • விதைகள் முளைப்புத்திறன் 24 மாதங்கள் வரை இருக்கும்.

  • கொதிக்க வைக்கப்பட்டு இறக்கப்பட்ட நீரில் 24 மணி நேரம் ஊர வைக்கப்படுகிறது.

  • விதைகள் 1 அல்லது 1.3 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளல் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • பாலித்தீன் பை நிழலில் வைக்கப்பட்டு தினமும் நீர் தெளிக்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 7 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • 6 மாதங்களான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.         

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • காற்று தடுப்பனுக்கு இடைவெளியானது 1 x 2 மீ மற்றும் மற்ற தோட்ட உற்பத்திக்கு 2 x 2 மீ இடைவெளி இருப்பது அவசியம்.
  • நிழலுக்காக வளர்க்கப்படும் மரங்களுக்கிடையேயான இடைவெளி 5 – 10 மீ இருக்க வேண்டும்.

  • மரப்பண்ணையை களைகள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

  • 10 - 15 வருடங்கள்

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 1500 – 2000 என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

ஊடுபயிர் சாகுபடி :

முக்கிய பயன்கள் :

  • எந்தவொரு மரமும் வளராத வளம் குறைந்த மண்ணிலும் இம்மரம் வளரும் தன்மை கொண்டது. எனவே மண்ணை வளமாக்க அதிகமாக பயிரிடப்படுகிறது.
  • நிழலுக்காக இம்மரம் காப்பி, கிராம்பு மற்றும் ரப்பர் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. ஜாதி காய் மற்றும் மற்ற நிழல் தேவைப்படும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயர்களினுள் ஊடுபயிராக பயன்படுத்தப்படுகிறது.