பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

தைல மரம்


அறிவியல் பெயர் :

யூகலிப்டஸ் குளோபுலஸ்

பொதுப்பண்பு :

  • நீலம் கலந்த சாம்பல் நிறமுடைய பட்டையையுடைய இலையுதிர் மரமாகும்.      
  • இலைகள் நறுமணம் தரும் தன்மையுடையது.

பரவல் :

  • இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மரயினமாகும். ஆனால் தற்பொழுது அனைத்து பகுதிகளிலும் அதிகமாக பயிரிடப்படுகிறது.

வாழிடம் :

கடற்கரை பகுதி மற்றும் மலைச் சரிவு பகுதிகளில் வளரக்கூடியது.

மண் :

அனைத்து மண்; வகைகளிலும் வளரக்கூடியது. இதன் நாற்றுகள் வளம் குறைந்த மண்ணிலும் நன்கு வளரும் தன்மையுடையது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1100மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.

மலையளவு :

500-1500மி.மீ

வெப்பநிலை :

12 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வேகமாக வளரக்கூடிய மரமாகும்.     
  • வலிமையான ஒளி விரும்பி, மற்ற தாவரங்களுடன் போட்டியிடும்.
  • நீண்ட வறட்சியை தாங்கும் மற்றும் அதிக நீர் தேங்கும் பகுதிகளிலும் நன்கு வளரும்.
  • ஆனால் அதிக பனி மற்றும் களைகளை தாங்கி வளரும் தன்மையற்றது.

வளரியல்பு :

பசுமைமாறா மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

இயற்கை மறு உருவாக்கம்:

 

  • மறுதாம்பு முறை மற்றும் விதைகள் மூலம் நன்கு வளரக்கூடியது.

 

செயற்கை மறு உருவாக்கம்:

 

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

 

  • இளம் பருவத்தில் தரமான விதைகள் கிடைக்கிறது.
  • விதையானது மேஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
  • ஒரு கிராம் விதையில் 230 - 350 விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 30 -80 சதவிகிதம் ஆகும்.
  • விதைகளின் முளைப்புத்திறன் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கும்
  • ஒரு கிராம் விதையில் 45 நாற்றுகளை உருவாக்கலாம்.

 

விதை நேர்த்தி:

 

  • தேவையில்லை.

 

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

 

  • பிப்ரவரிமார்ச் மாத இடைவெளியில் விதைகள் விதைக்கப்படுகிறது.
  • ஒரு சதுர மீட்டர் தாய்பாத்திக்கு 75 – 100 கிராம் விதைகள் தேவைப்படும்.
  • விதைக்கப்பட்டவுடக் தாய்பாத்தி மணல் கொண்டு லேசாக மூடப்படுகிறது.
  • தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
  • 10 - 15 தினங்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • 2 இலைகள் துளிர்ந்த பிறகு தாய்பாத்தியிலிருந்து வளர் ஊடகம் அடங்கிய பாலித்தீன் பைகளுக்கு நாற்றுகள் மாற்றப்படுகிறது.

 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • பருவ மழை சமயத்தில் நாற்றுகள் நேரடியாக நடப்படுகிறது.
  • நிலத்தை உழுது மண்ணை இலகுவானதாக மாற்ற வேண்டும். பின் குழி எடுக்கும் இயந்திரத்தை கொண்டு குழிகள் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் எடுக்கப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3 x 2 மீ அல்லது 3 x 3 மீ மற்றும்  3.5 x 3.5 மீ என இருக்க வேண்டும்.

  • 10 – 20 செ.மீ உயரத்திற்கு ஆமல் வளரும் மறுதாம்புகள் வளர அனுமதிக்கப்பட வேண்டும்.
  • அறுவடை செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் மறுதாம்பு வளர்கிறது.
  • தேவையற்ற மறுதாம்புகள் முதல் மற்றும் இரண்டாம் வருடங்களில் நீக்க வேண்டும்.

  • 40 - 50 வருடங்கள்

முக்கிய பயன்கள் :

  • இதன் இலைகள் நறுமண எண்ணெய் தயாரிக்க பயன்படுகின்றது.
  • மரக்கட்டையிலிருந்து அத்தியாவசியமான நறுமண எண்ணெய் எடுக்கப்படுகிறது.
  • மரம் 6-12 சதவிகித டானின் கொண்டது. பட்டை 3 -15 சதவிகித டானின் கொண்டது.
  • பிற பயன்கள்:
  • எரிப்பொருளாக பயன்படுகிறது. தைல மரம் 1900 கிலோ கலோரி வெப்பத்தை தரவல்லது.
  • இலைகள் பொருயாதார முக்கியத்துவம் வாய்ந்த தைலம் எடுக்க பயன்படுகிறது.

  • சுள்ளிகள் எரிப்பொருளாகவும், இலைகள் தைலம் எடுக்கவும் பயன்படுகிறது.

-->