பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

செந்தணக்கு


அறிவியல் பெயர் :

ஸ்டெர்குளியா யுரன்ஸ்

பொதுப்பண்பு :

  • சராசரி அளவுடைய இலையுதிர் மரமாகும்.
  • மரப்பட்டையானது காகிதம் போன்றது, மென்மையானது மற்றும் பளபளப்பான சாம்பல் நிறமுடையது.
  • பூக்கள் இளஞ்சிவப்பு நிறம் கலந்த மஞ்சள் நிறமுடையது.
  • நட்சத்திர வடிவமுடைய கருப்பு நிற காய்களை கொண்டது. காயானது 3 – 4 விதைகளை கொண்டது.

பரவல் :

  • இம்மரம் இந்தியா முழுவதும் பரவிக்காணப்படுகிறது.

வாழிடம் :

வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

பரவலாக செம்பொறை மண்மற்றும் வறண்ட மணலில் வளரும் தன்மை கெண்டது.

மண் pH :

6.5 – 7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

750 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

500 – 1900 மி.மீ

வெப்பநிலை :

40 - 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

வறண்ட, வெப்பமான மற்றும் பாறைகள் நிறைந்த நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • இம்மரம் ஒரு அதிக ஒளி விரும்பி மரமாகும்.
  • வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
  • இம்மரம் நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் வளரும் தன்மையற்றது.

வளரியல்பு :

வறண்ட இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


வளர்ச்சி :

மெதுவாக வளரக் கூடியது.

உயரம் :

15 மீட்டர்

  • சாதகமான சூழ்நிலையில் விதைகள் மூலமாக இனப்பெருக்கமடையக்கூடியது.

  • நேரடி விகைள் விதைப்பு மூலமாகவும் மற்றும் நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

  • பழுத்த நெற்றானது பிப்ரவரி - மார்ச் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • நெற்றானது வெயிலில் உலர்த்தப்படுகிறது.
  • உலர்த்தப்பட்ட நெற்றிலிருந்து விதைகள் தனியே பிரித்தெடுக்கப்படுகிறது.
  • ஒரு கிலோ விதையில் 4400 - 6400 விதைகளிருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 50 – 100 சதிவிகிதமாகும்.
  • நாற்று உற்பத்தி திறன் 18 – 90 சதவிகிதமாகும்.

  • குளிர் நீரில் 6 மணிநேரம் ஊர வைத்து நேர்த்தி செய்யப்படுகிறது.

  • பாலித்தீன் பையில் வளர் ஊடகங்களை நிறப்பி, அதில்; விதைக்கப்பட வேண்டும். விதைகள் ஏப்ரல் - மே மாத இடைவெளியில் விதைக்கப்பட வேண்டும்.
  • பாலித்தீன் பையானது மணல் மற்றும் எரு அடங்கிய வளர் இடுபொருட்கள் நிறப்பப்படுகிறது.
  • 7 - 15 நாட்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • விதை முளைத்தபின் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் பாய்ச்சப்படுகிறது.
  • 3 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

நேரடி விதைப்பு:

  • 1.8 மீ இடைவெளியில் 30 செ.மீ ஆழத்தில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • பருவ மழை சமயத்தில் 1.8 x 1.8 x 1.8 மீ இடைவெளியில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.

நாற்றங்கால் உற்பத்தி நாற்றுகள் :

  • 3 மாதமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • பருவ மழை சமயத்தில் 1.2 x 1.2 மீ இடைவெளியில் விதைகள் நேரடியாக விதைக்கப்படுகிறது.
  • குழிகள் மழை பொழிவுக்கு முன்னதாக எடுக்க்ப்பட வேண்டும்.

 

  • களையெடுத்தல் மற்றும் மண்ணை உழுதல் அவசியமாகும்.

 

  • 40 - 50 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • ஒரு டன் மரம் 2000 – 2500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

  • இம்மரத்தின் கோந்து பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
  • கோந்து காகித அச்சுக்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
  • இதன் மரம் தடிமரப்பயன்களுக்கு பயன்படுகிறது.

கோந்து உற்பத்தி :

  • 90 செ.மீ மரச்சுற்றளவு கொண்ட மரம் கோந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • மரத்தில் கோந்து உற்பத்திக்காக 15 செ.மீ நீளத்தில் 10 செ.மீ அகலத்தில் மற்றும் 2.5 – 3 செ.மீ ஆழத்தில் மேற்தோல் நீக்கப்படுகிறது. அக்டோபர் - ஜுன் கால இடைவெளியில் மேற்தோல் நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது.